Saturday, December 6, 2008

ஆபத்துக் காலத்தில் !!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் வழிபாட்டு ஸ்தலத்தில் நடந்த நெருக்கடியில் சிக்கி பலர் மரணம் - செய்தி.



ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோவிலில் வழிபாட்டு ஸ்தலத்தில் நடந்த நெருக்கடியில் சிக்கி பலர் மரணம் - செய்தி.



இன்னும் கும்பகோணம் பள்ளி விபத்து, திருச்சியில் ஒரு திருமண வீட்டில் நடந்த தீ விபத்து இவை எல்லாவற்றிலும் விபத்தில் நேரடியாக சிக்கி இறந்தவர்க்ளை விட, நெரிசல் ஏற்பட்டு நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் தான் அதிகம்.

நமது நாட்டில் இருக்கிற மக்கள் தொகைக்கு எந்த ஒரு சின்ன விபத்திலும் நூற்றுக்கணக்கில் உயிர் போவதென்பது நிச்சயமான ஒன்று. ஆனால் இதை தவிர்க்கவஎ முடியாதா? முடியும் நம்மால் மட்டுமே முடியும்.

வ்ழக்கம் போல அரசாங்கம் தடுப்பு நடவடிக்கை எடுக்க தவறி விட்டது, அந்த இன்ஸ்பெக்டர் பணம் வாங்கிட்டு சான்றிதழ் கொடுத்துட்டார், இவர் இப்பிடி பண்ணீட்டார்னு கையை நீட்டுறதற்கு முன், எதனால் நிகழ்கிறது, எப்படி தடுக்கலாம் என் பார்ப்போம்.

எதனால் நிகழ்கிறது:

எனக்கு தெரிந்தவரை ஒருசில காரணங்களை பட்டியலிட முயன்றுள்ளேன், உங்களுக்கு தெரிந்த காரணங்களையும் சேர்த்துவிடுங்கள்.

1. அதிகம் மக்கள் கூடும் இடங்களில், ஆபத்துக்கால வழி இல்லாதது.
2. போதுமான விபத்து தடுப்பு உபகரணங்கள் இல்லாமல் கட்டடங்கள் பராமரிக்கப்படுவது.
3. மின்சார உபகரணங்கள், மற்றும் மின்சாரம் சார்ந்த அனைத்து இணைப்புகளும் முறையாக வருடத்திற்கொருமுறையேனும் தணிக்கைக்குட்படுத்தாதது.
4. தீ அணைக்கும் உபகரணங்கள் இருந்த போதிலும் அதை பயன் படுத்த தெரியாதது.
5. அதிக மக்கள் கூடும் இடங்களில் அவசர காலத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என முறையான விளக்கங்கள் சொல்லாதது.

இன்னும் நிறைய சொல்லலாம்.

ஒருமுறை ஆஸ்த்ரேலியாவுக்கு வேலை விஷயமாக சென்று இருந்தேன். கெய்ன்ஸ் நகரின் அருகில் உள்ள ஒரு அலுமினா சுரங்கத்தில் ஒரு ரிப்பேர் வேலைக்காக சென்றிருந்தேன். நான் அந்த தொழிற்சாலைக்கு உள்ளே செல்லுமுன் பாதுகாப்பு பணியாளர்கள் அந்த தொழிற்சாலையைப் பற்றிய ஒரு அறிமுக வகுப்பு நடத்தினார்கள். இன்றும் இந்தியாவிலும் இத்தகைய அறிமுக வகுப்புகள் ஒருசில (!!!!????) நிறுவனங்களில் நடத்தப்படுகிறது. அந்த தொழிசாலையை பற்றிய முழு விவரமும் சொல்லிக்காட்டப்படும். அவசர காலங்களில் பின்பற்றவேண்டிய முறைகள், எந்த நிற விளக்கு எரிந்தால் அதற்கு என்ன அர்த்தம், எந்த இடங்களில் தீயணைப்பு உபகரணங்கள் உள்ளன, அவசர கால அழைப்பை கட்டவுடன் எங்கு கோடவேண்டும் என்று ஒரு தெளிவான வகுப்பு எடுத்து, அந்த வகுப்பில் சொல்லப்பட்டதை நீங்கள் எந்த அளவு புரிந்து கொண்டீர்கள் என்பதை ஒரு குறுந்தேர்வு வைத்து உறுதி செய்து கொண்டு அந்த தேர்வில் நீங்கள் தேறியிருந்தால் மாத்திரமே உள்ளே அனுமதிக்கப்படுவீர்கள். இப்படியாக உங்கள் பாதுகாப்பிற்கு முழு உத்திரவாதம் உறுதி செய்யப்பட்ட பின்னரே நீங்கள் உள்ளே அனுமதிக்கப்படுவீர்கள். இது ஒரு நல்ல படிப்பினையாகும்.

ஆனால் நமது நாட்டில் நிலைமையை நினைத்துப்பார்த்தால் பயமாகத்தான் உள்ளது. மக்கள் அதிகம் வந்து போகும் இடங்களை கவனித்துப்பாருங்கள்.

கல்யாண மண்டபங்கள் - எத்தனை கல்யாண மண்டபங்களில் அவசர கால வழிகள் இருக்கின்றன? கல்யாண மண்டப சமையல் கட்டுகளில் கூட சரியான புகை போக்கிகள் இருப்பதில்லை. நம்மூரில் சாதரண கல்யாணங்களில் கூட ஒரு 100 பேராவது கோடி விடுவோம். பல கல்யாண மண்டபங்களில் மேலே ஒரு தளம், கீழே ஒரு தளமென கட்டி, குறுகலான படிக்கட்டுகள் அமைத்திருக்கிறார்கள். அவசர காலங்களில் இந்த படிகள் மிகவும் ஆபத்தானவைகள்.
  • அவசர காலவழிகள் அமைக்கப்படவேண்டியது அவசியம்.
  • முக்கியமாக மின்சார இணைப்புகள் ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதை ஏதொ ஒரு அரசாங்க விதிகளின் கட்டுப்பாட்டுக்காக மண்டப உரிமையாளர்கள் செய்யாமல், மண்டபத்தில் கூடும் மக்களின் ந்லனை மனதில் கொண்டு செய்யவேண்டும்.
  • சமையல் கூடத்தில் போதிய காற்று வசதி இருப்பதற்கான அனைத்து உபாயங்களையும் செய்வதுடன், தீயணைப்பு உபகரணங்கள் அடுப்புக்கு வெகு அருகில் இருக்க வேண்டும்.
  • மண்டப ஊழியர்களுக்கு தீயணைக்கும் முறை பற்றிய அடிப்படை அறிவாவது இருக்க வேண்டும். (பெரும்பாலான மண்டபங்களில், திருமண சமயத்தில் மண்டப ஊழியர்களை காண்பதே மிக அரிதாயிருக்கும்).
  • மண்டபத்தில் நடக்கும் திருமணங்களில் உருவாக்கப்படும் ஹோமத்தீயின் அளவு கட்டுப்படுத்தப்படவேண்டும். தீயணைப்பு கருவிகள் இங்கும் வைக்கப்பட வேண்டும். (திருச்சியோ அல்லது திருரங்கமோ, ஒரு கல்யாணத்தில் தீ ஹோம குண்டத்தில் இருந்து பரவியதாக எனக்கு ஞாபகம்)
  • எல்லாவற்றிற்கும் மேலாக திருமணமோ அல்லது எந்த ஒரு நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பற்றிய அறிவிப்பு கலந்துகொள்ளும் எல்லோருக்கும் அறிவிக்கப்படவேண்டும்.
  • அடுத்த முறை நம் வீட்டுத்திருமணத்திற்கென மண்டப முன்பதிவு செய்யப் போகும் பொழுது, இந்த விதிகளெல்லாம் பின்பற்றப்படுகின்றனவா எனப் பாருங்கள். ஒரு மண்டபம் கூட தேறாது என நினைக்கிறேன்.

வர்த்தக வளாகங்கள்:

நம்மூரிலிருக்கும் எல்லா வணிக வளாகங்களிலும் அவசர கால வழிகள் கட்டாயமாக்கப்படவேண்டும். ஸ்பென்ஸர் பிளாசாவையே எடுத்துக்குள்ளுங்கள். எத்தனை பேருக்கு அதன் அவசர கால வழிகளைப் பற்றி தெரியும். மிகவும் குறுகலான நடை பாதைகளை அமைத்திருக்கிறார்கள். இரு கடைகளுக்கு மத்தியில் இருக்கும் நடைபாதை என்னவோ விதிகளின் படி சரியான அகலத்தில் தான் இருக்கும் என்று நினைக்கிறேன், ஆனால் வரும் கூட்டத்தைப்பார்த்தால், இது போல் இரு மடங்கு அகலத்துடன் நடை பாதை வைத்தாலும் நெரிசல் குறையாது. ஒரு வளாகத்திலிருந்து இன்னொரு வளாகத்திற்கு செல்லும் பாதைகள் மிகவும் குறுகலாகவே எனக்குத் தெரிகிறது.

ஒருமுறை பாண்டி பஜாரிலிருக்கும் ரத்னா ஸ்டோரின் பாத்திரக்கடைக்கு போகும் பாக்கியம் கிடைத்தது. அப்பப்பா, வாழ்வில் இது போன்றதொரு தவறை இனிமேல் செய்யக்கூடாதென முடிவு செய்தேன். 4 அல்லது 5 தளங்களைக் கொண்ட பாத்திரக்கடை அது. கீழ்தளத்தில் முழுவதும் பாத்திரங்களை அடுக்கி, மேலும் அடுக்கி, மேமேமேமேல்ல்ல்லும் அடுக்கி வைத்திருக்கிறார்கள். கூரையிலும் தொங்க விட்டிருக்கிறார்கள். சிறிது உடல் பெருத்த ஆசாமிகள் உள்ளே நுழைந்து எந்தப்பாத்திரத்திலும் மோதாமல் வந்து விட்டால் அவருக்கு பரிசே தரலாம். அனைத்து தளங்களுக்கும் செல்ல மின் தூக்கி உள்ளது, ஆனால் மின் தூக்கியின் கதவு வரை செல்ல வேண்டுமென்றால் தட கள விளையாட்டுகளில் ஒரு சிலவாவது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். குனிந்து நிமிர்ந்து ஒரு லாங் ஜம்ப், மற்றும் ஹை ஜம்ப் எல்லாம் செய்தபின்னால் நீங்கள் கதவருகில் சென்று சேரலாம். நானும் மனைவியும் இந்த வம்பே வேண்டாம் என்று சொல்லி படிகளில் ஏறப்போனோம். மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. படிகளில் முழுவதும் பாத்திரங்களாய் அடுக்கி ஒரு கால் வைக்கும் அளவிற்கு மட்டும் இடம் விட்டிருக்கிறார்கள். முதலில் வெளியே போலாம் வாவென மனைவியை இழுத்து வந்து விட்டேன்.

ஏன் ஒரு குறைந்த பட்ச பாது காப்பு விதிகளை கூட நம்மவர்கள் பின்பற்ற மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ரங்கநாதன் தெருவிலிருக்கும் எந்த கடையில் வேண்டுமானாலும் போங்கள், குறைந்த பட்ச பாதுகாப்பு என்பது கூட மருந்துக்கும் கிடையாது.

இதற்கெல்லாம் அரசை குற்றம் சொல்லி ஒரு உபயோகமும் இல்லை. வளாக உரிமையாளர்களாவே முன்வந்து, வாடிக்கையாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை தர வேண்டும் என எப்பொழுது யோசிக்கிறார்க்ளோ அப்பொழுது தான் மனித உயிர்கள் மதிக்கப்படும்.

இந்தப் பதிவு இன்னும் தொடரும்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

6 comments:

மன்மதக்குஞ்சு said...

"அண்ணே, சூப்பரண்ணே" "அருமை, ஆழ்ந்த கருத்துக்கள், என்னை மிகவும் யோசிக்க வைத்துவிட்டீர்கள்"
பாராட்ட தனியாக வார்த்தைகள் தேடாமல் தங்களின் முதல் பதிவில் இருந்து சுட்டுட்டேன். தொடரட்டும் தங்கள் பணி

புதுகை.அப்துல்லா said...

//"அண்ணே, சூப்பரண்ணே" "அருமை, ஆழ்ந்த கருத்துக்கள், என்னை மிகவும் யோசிக்க வைத்துவிட்டீர்கள்"
பாராட்ட தனியாக வார்த்தைகள் தேடாமல் தங்களின் முதல் பதிவில் இருந்து சுட்டுட்டேன். தொடரட்டும் தங்கள் பணி

//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டு

(வேற எந்தக் கமெண்டு போடவும் உங்ககிட்ட பயமா இருக்கு)

:)

தராசு said...

வாங்க மன்மதக்குஞ்சு,

வருகைக்கு நன்றி.

தராசு said...

டேங்சுங்க அப்துல்லா,

ஆமா, அது இன்னா பயமாக்குது, அதுவாக்குது, இதுவாக்குதுன்னுட்டு,

சின்னப்புள்ளத்தனமா!!!

ஒழுக்கமா சொல்லவந்தத சொல்லுங்க,

துபாய் எப்டீக்குது? நானும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை துபாய் வருகிறேன், ஆனா ஏர்போர்ட்டொட சரி, சென்னைக்கு வரும் வழியில் ஒரு நான்கு மணி நேரம் ஏர்போர்ட்ல தான் தவமிருக்கணும்.

கபீஷ் said...

ரொம்ப நல்ல உருப்படியான பதிவு!!!

தராசு said...

டேங்சு கபீஷ்,

வந்ததுக்கு டேங்சு.