Friday, February 27, 2009

"ய ர ல வ ழ ள" இடையினம்

அருமை நண்பர் விக்னேஷ்வரனின் "களிமண் தின்னும் கிளிகள்" என்ற இந்தப் பதிவைப் படித்தேன்.

தென் அமெரிக்க நாடுகளில் வாழும் கிளிகளைப் பற்றிய அருமையான பதிவு.

ஆனால், நான் சொல்ல வருவது கிளிகளைப் பற்றிய விஷய்ம் அல்ல. தமிழில் எழுதும் பொழுது "ழ" "ள" "ல" என்ற இந்த மூன்று எழுத்துகளின் பயன்பாட்டில் ஒரு சில பதிவர்களுக்கு ஏற்படும் குழப்பத்தினால், பதிவின் அர்த்தம் கெட்டு விடுவது மாத்திரமல்ல, அழகும் கெட்டு விடுகிறது. விக்கியின் இந்தப்பதிவில் பின்னூட்டமிடும்பொழுது சகோதரி ஹேமாவும் இதை சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

சமீபத்தில் அநேக பதிவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் பொழுது கூட "இதயம் கனிந்த பொங்கள் நல்வாழ்த்துக்கள்" என்று எழுதியிருந்தார்கள். இது கவனக் குறைவினால் ஏற்படுகிறதா, அல்லது இவர்கள் தமிழ் மொழியை புரிந்து வைத்திருப்பதே இவ்வளவு தானா என்று தெரியவில்லை.

அடுத்த குழப்பம் "ண"வுக்கும், "ன"வுக்கும் இடையில் நடப்பது. ஒரு சில திருமண அழைப்பிதழ்களில் கூட இந்த குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன்.

திரைப்பட இசைஅமைப்பாளர்களில் பலர் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம் என்று சொல்லி அவர்களின் உச்சரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்பது சந்தேகமே. உதாரணத்திற்கு " பச்சைக்கிளி முத்துச்சரம்" என்ற படத்தில் வரும் "காதல் கொஞ்சம், காற்றுக் கொஞ்சம்" என்ற வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டிருப்பதை உன்னிப்பாக கவனித்துக் கேளுங்கள். இந்தப்பாடலை பாடிய பாடகர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இவர் பாடியிருப்பது "காதல் கொஞ்சம், காட்ருக் கொஞ்சம்" என்றுதான் பாடியிருக்கிறார். இன்னும் இதே போல நிறைய வார்த்தைகள் "என்று" என்பது "என் ட்ரு" என்றும், "அன்று" என்பது " அன் ட்ரு" என்றும் பல இடங்களில் உச்சரிக்கப்படுவதை காண முடிகிறது.

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் மாறாமல் பதிவிடுவதும், உச்சரிப்பதும் பதிவர்களுக்கு அழகுதானே.

அதிகம் பேசிவிட்டேனோ, விக்கி அடிக்க வராதீங்க.

Tuesday, February 10, 2009

அகம் பிரம்மாஸ்மி - அலசல்களின் அலசல்

அட என்னாங்கய்யா இது,

யாரைப்பார்த்தாலும், "நான் கடவுள்" விமர்சனம் எழுதறாய்ங்க. போற போக்கைப் பார்த்தா இந்தப்படத்துக்கு விமர்சனம் எழுதலைன்னா அவுங்க பதிவரே இல்லைன்னு சொன்னாலும் சொல்வாய்ங்க போலிருக்கு. ஒருத்தர் அகம் பிரம்மாஸ்மி ஆளவுடுங்கடா சாமிங்கறாரு, இன்னும் பல பேர், இசை ஞானி கலக்கீக்கறாரு, ஆர்தர் அசத்திப்புட்டாரு, வில்லன் வெளுத்து வாங்குறாரு, அகோரி அதிகம் வேலை செய்யல, தலயோட தல தப்பிச்சுது, பூஜா பூந்து வெளையாடுது, அந்த சின்னப்பையன் சிரிக்க வைக்கிறான், தாடிக்காரரு தத்ரூபமா இருக்கறாரு, ஜெயமோகன் ஜொலிக்கறாரு, திரைக்கதை தொங்குது, விளிம்பு நிலை மனிதர்களின் வேதனை வெளிப்படுது, சாதுன்னாலே கஞ்சா குடிக்கறவந்தானா, சேதுல செதுக்கிருந்தாரு, நந்தால நச்சுனு சொன்னாரு, பிதாமகன்ல பின்னியெடுத்தாரு, பாலாகிட்டேருந்து நாங்க இன்னும் நெறய எதிர்பார்க்கறோம்.....,,,,,,!!!!!!!!, யே யப்பா, போதுமய்யா, எத்தனை விமர்சனம், எத்தனை அலசலு, அளும்பு.

ஆமா, நீங்கெல்லாம் படம் பார்க்க போனா இது இப்படித்தான் இருக்கணும்னு உக்கார்ந்து யோசிச்சு முடிவு செஞ்சுட்டுத்தான் போவீங்களா? பாலாவுக்கு பாடம் நடத்த பல பேர் கிளம்பிருக்காய்ங்க போல இருக்குது.