Wednesday, November 17, 2010

யோவ், ஆதி.... என்ன ஆச்சு உனக்கு...???

யோவ், நல்லத்தானய்யா எழுதிகிட்டிருந்தீரு, துறை சார்ந்த பதிவு, தங்கமணி பதிவு, அப்புறம் விமர்சனம், அப்புறம் அது, அப்புறம் இதுன்னு எல்லாம் ஒழுக்கமாத்தானய்யா போயிகிட்டிருந்தது, இப்ப என்ன ஆச்சுன்னு இப்பிடி ஒரு வம்பு பண்ண வந்திருக்கீங்க? இப்பத்தானய்யா போட்டியெல்லாம் வெச்சு, அதுக்கு நீ பட்ட கஷ்டத்தையெல்லாம் பார்த்து மலைக்க வெச்சீகளே, என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன், இல்ல ஏன்னு கேக்குறேன்.

How do you feel if, I stop blogging?

திடு திப்புன்னு ஏன்யா புத்தி இப்பிடி வேலை செய்யுது? வேணாய்யா எதாவது சொல்லீரப்போறேன். வழக்கமா, ஒழுக்கமா கடையை தொறந்தமா, பதிவை போட்டமான்னு போயிகிட்டேயிரு, அதை வுட்டுட்டு சும்மா இப்பிடி கோக்கு மாக்கா எதாவது யோசனை பண்ணுனே, அப்புறம் தாம்பரம் முழுக்க உனக்கு பேனர் கட்டிருவோம், அண்ணி கிட்ட சொல்லி கொள்ளிக்கட்டைல சூடு வெக்க சொல்லீருவோம், ஆமா....., சர்வே எடுக்கறாராம் சர்வே, வாயில நல்லா வர்றதுக்குள்ள ஒழுக்கமா அந்த சர்வேவை தூக்குற நீ.... # கடுப்பு.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அது என்னன்னே தெரியல, எங்க ஆபீஸ்ல எல்லார் கடையையும் படிக்க முடியுது, ஆனா தல நர்சிம் கடை, லக்கி லுக்கு கடை, வித்யாக்கா கடை எல்லாம் தொறந்தா அதை மாத்திரம் இந்த பொட்டி தட்டற கும்பல் தொறக்க வுட மாட்றாங்கோ, கடுப்பேத்தறாங்க மை லார்ட்.... # ஏமாற்றம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவர் சந்திப்பு நடந்து பல நூற்றாண்டு ஆன மாதிரி இருக்கு, இப்ப கொஞ்ச நாளா ஊர்பக்கம் தலை காட்ட முடியுதே, சந்திப்பு எதாவது வைப்பாங்களான்னு நானும் பார்க்கிறேன், மூத்த பதிவர்கள் எல்லாம் ஒரே பிஸியா இருக்காங்க போல இருக்குது. கேபிள் அண்ணன்கிட்ட கூட சமீபத்துல கேட்டேன், பார்க்கலாம்னு சொன்னாரு. இந்த வருஷ கடைசிக்குள்ள ஒரு பதிவர் சந்திப்பு வைங்கப்பு....... # ஏக்கம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவுலகுல எல்லாம் பரபரப்பான விஷயங்களை மாத்திரம்தான் பேசறாய்ங்க, அதாவது வில்லங்கமான மேட்டர்னா அதை வெச்சு ஒரு நூறு பதிவாவது வருது, காமன்வெல்த், ஆதர்ஷ் அபார்ட்மெண்ட், ஒபாமா விஜயம், ராசா என்பார் மந்திரி என்பார்னு எல்லாமே ஒரு பரபரப்பான விஷயங்களைத்தான் எழுதறாய்ங்களே ஒழிய, காமன்வெல்த் போட்டில மெடல்களை அள்ளிக் குவிச்ச இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டிகள்ல மண்ணைக் கவ்வுதே அது ஏன்னு ஒரு வார்த்தை கேக்கறாங்களா???? இல்ல, நம்ம வீரர்கள் எல்லாம் நம்ம பேட்டைக்குள்ள மட்டும்தான் வீரர்களா??? இதைப் பத்தி யாருமே எழுத மாட்டேங்கறாய்ங்களே???? # கொளுத்தி போடல்

Tuesday, November 16, 2010

அத்திம்பேர் சொல்றார்....

ரத்தன் டாடா – ஊசியிலிருந்து உலோகத்துல செய்யற எந்தப் பொருளா இருந்தாலும் அதையெல்லாம் செஞ்சு சந்தைல விட்டு துட்டு பார்க்கற இந்த மனுஷனுக்கு, சமீபத்துல ஒரு சோதனை. “ஏண்டா அம்பி, எல்லாத் துறையிலையும் கால் பதிச்சிருக்கயே, இந்த விமான சேவையை மாத்திரம் ஏன் விட்டு வெச்சிருக்கே, அதுலயும் புகுந்து டாடா ஏர்வேஸ்னு ஒண்ணை ஆரம்பிச்சு, ஆகாசத்துலயும் கால் பதிக்க வேண்டியதுதானே” ன்னு கேக்க, டாடா சொன்னார், “நானும் அதுக்கெல்லாம் ரூட் போட்டேன் அத்திம்பேர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸோட கையை கோர்த்துண்டு வானத்துல வலம் வரலாம்னு மூணுதரம் நினைச்சேன், ஆனா அதுல பாருங்கோ, இந்தியாவுல விமானம் ஓட்டறேன், அனுமதி தாங்கோன்னு அரசாங்கத்து கதவை மூணு தரம் தட்டினேன், அப்பத்தான் உள்ளிருந்து குரல் வந்தது, 15 கோடி ரூபா இப்போதைக்கு தட்சணையா குடுத்துருங்கோ, அப்புறமா பூஜை போடறச்சே மீதியை சொல்றோம்னு சொன்னா, அதுனாலதான் வம்பே வேண்டாம்னு விட்டுட்டேன்” னு சொல்றார். இத்தனை இதை நாள் மனசுக்குள்ளயே வெச்சு புழுங்கிபோனாரோ என்னமோ, இப்ப வெளில சொல்லீருக்கார், இன்னும் என்னவெல்லாம் ஆகப் போகுதோ அந்த ஈஸ்வரன் தான் காப்பாத்தணும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அதுல பாருங்கோ, நம்ம மனுஷா எங்க இருந்தாலும் எப்ப இருந்தாலும் ஒரு “எக்ஸ்ட்ரீம் எண்ட்” ல தான் இருக்கா..., தலைல தூக்கி வெச்சு துதி பாடறதுன்னா பயங்கரமா பாடறா, இல்லைன்னா காலடில போட்டு ஒரே அடியா மிதிச்சுடறா. இப்பவும் பாருங்கோ, நம்ம நாட்டுக்கோட்டை செட்டியார் இருக்கறாரோன்னோ, என்ன திரு திருன்னு அம்மாஞ்சியாட்டம் முழிக்கறேள், நம்ம ப. சிதம்பரத்தைதான் சொன்னேன் ஓய், அவரு புள்ளையாண்டான் கார்த்திக் சிதம்பரம் இருக்கனோன்னோ, அவனுக்கு பிறந்த நாள் வந்துடுத்து. அவன் பின்னால சுத்தற கும்பல் ஒண்ணு, சென்னைல நுங்கம்பாக்கம் ஏரியால முழுவதும் அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி ஒவ்வொரு பத்து அடி தூரத்துக்கும் ஃபிளக்ஸ் பேனர் கட்டியிருக்கா ஓய், வெறும் கண்ராவியா இருக்கு, அதுல இருக்கற வாசகமெல்லாம் பார்த்தா, குமட்டலா வர்றது... வருங்கால தமிழகமே, இளைஞர்களின் இதயத்துடிப்பே, காவிய புதல்வனே, சரித்திர நாயகனே, கலைமாமணியே, வாழும் வள்ளலே, அய்யோ கர்மம், கர்மம், இன்னும் என்னென்ன கருமாந்தரமெல்லாம் எழுதியிருக்காளோ, தெரியாமத்தான் கேக்கறேன், இந்த புள்ளையாண்டான் அப்படி நாட்டுக்கு என்னத்தை செஞ்சு கிழிச்சுட்டான்னு இவால்லாம் அவனுக்கு கூஜா தூக்கிண்டு ஜால்ரா அடிக்கறா....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கலி முத்திடுத்துன்னு சும்மாவா சொல்றா, அதுல பாருங்கோ, நேத்து நம்ம சேச்சு இல்லை, அவன் ஆபீஸ்ல அவனை பாக்க போயிருந்தேன். சேச்சு ஆள் பார்வைக்கு ஒரு மாதிரி இருந்தாலும், என்னா உலக ஞானம்கறேள்.., அவனோட பேசிண்டிருக்கறச்சே அனுமர் லங்காபுரிய வதம் பண்ண கதைய ரொம்ப அழகா வியாக்யானம் பண்ணிண்டிருந்தான், அப்பத்தான் அவன் பக்கத்து சீட்ல இருந்து ஒரு பிரகஸ்பதி வந்து “ சார் ஒரு டவுட்டு” ன்னு கேட்டான். இவனுக்கு என்ன டவுட்டுனு நான் யோஜனை பண்ணிண்டிருக்கறச்சே, சேச்சுவும் ரொம்ப பொறுமையா “ என்ன வேணும், சொல்லுப்பா” ன்னு சாந்த சொரூபியா அவனை கேட்டா, அந்த பிரகஸ்பதி என்ன கேட்டான் தெரியுமோ, “சார், இந்த கிருஷ்ணா நீ பேகனே பாரோ ங்கற பாட்டு, திரௌபதி வஸ்தாகரண சமயத்துல கிருஷ்ணா வேகமா வந்து என்னை காப்பாத்துன்னு திரௌபதி பாடற பாட்டா சார்” னு கேட்டான். அதுக்கு சேச்சு சொன்னான், ”ஏம்ப்பா, காவியங்கள்லயும், புராணங்கள்லயும் மனுஷாளுக்கு பிரயோஜனமா எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது நேக்கு ஏம்பா இந்த மாதிரி டவுட்டு வர்றது” ன்னு கேட்டான். அதுக்கு அவன், ”இல்ல சார் ஒரு அகடமிக் இண்ட்ரஸ்டு”ன்னு சொன்னான். அவ்வளவுதான், எங்கே இருந்துதான் சேச்சுவுக்கு அவ்வளவு ரௌத்ரம் வந்ததோ தெரியல, “ஏண்டா அபிஷ்டூ, ராமாயணத்துல ராமன் என்ன சொன்னார், கீதைல கிருஷ்ண பரமாத்மா என்ன சொன்னார்னெல்லாம் நேக்கு டவுட் வராதோ, திரௌபதி வஸ்திராஹரணத்துலதான் டவுட் வருமோ” ன்னு ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்துட்டான்.

கர்மம், கர்மம், எல்லாம் வக்ரம் புடிச்ச வாலறுந்த வானரங்கள், எதுலயெல்லாம் டவுட் கேக்குது பாருங்கோ.....