Wednesday, April 8, 2009

இத்த இன்னாண்ணு சொல்றது

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது

உன் விழிச்சாட்டை அடிகள்

என் மீது வீசப்படாவிட்டால் - என்

மனக் குதிரை மண்டியிட்டுக் கொள்கிறது.



என் வீட்டுக் கண்ணாடியில் என்ன

வகை மாயம் செய்தாய்,

என்னைத் தேடினால், சந்தோஷமாய்

வேறு எவனோ ஒருவன்.



பூக்களின் முகத்தை அனைவரும்

காணுவர். ஆனால் இன்றுதான்

கண்டேன், ஒரு பூவின் பின்னால்

ஒரு முழம் மல்லிகைப் பூ.



கவிஞர்களாலா கவிதை உருவானது

இல்லை, இல்லை, - இதோ

ஒரு கவிதை ஒரு கவிஞனை

உருவாக்குகிறது.

17 comments:

கார்க்கிபவா said...

/கவிஞர்களாலா கவிதை உருவானது

இல்லை, இல்லை, - இதோ

ஒரு கவிதை ஒரு கவிஞனை

உருவாக்குகிறது.//

அடடா... நோட் பண்ணுங்கப்பா... என்னம்மா ஃபீல் பண்றாரு 50 வயசுல ?

தராசு said...

@கார்க்கி said...

//அடடா... நோட் பண்ணுங்கப்பா... என்னம்மா ஃபீல் பண்றாரு 50 வயசுல ?//

இதுக்கு இன்னா வயசு அது இதுன்னுட்டு,
சின்ன புள்ளத்தனமா இருக்கு

Thamira said...

இத்த இன்னாண்ணு சொல்றது? இதத்தான் நாங்க கொலவெறிக்கவுஜன்னு சொல்றோம்..

எம்.எம்.அப்துல்லா said...

//அடடா... நோட் பண்ணுங்கப்பா... என்னம்மா ஃபீல் பண்றாரு 50 வயசுல ? //


80 ஆனாலும் இவரு இப்பிடித்தாண்டா இருப்பாரு.

தராசு said...

// @ஆதிமூலகிருஷ்ணன் said...
இத்த இன்னாண்ணு சொல்றது? இதத்தான் நாங்க கொலவெறிக்கவுஜன்னு சொல்றோம்..//

டேங்சுங்க ஆதி.

உங்களுக்கு புரியுது, ஆனா ஃபர்ஸ்டு வந்தவருக்கு புரிய மாட்டேங்குது.

தராசு said...

@எம்.எம்.அப்துல்லா said...
//அடடா... நோட் பண்ணுங்கப்பா... என்னம்மா ஃபீல் பண்றாரு 50 வயசுல ? //


80 ஆனாலும் இவரு இப்பிடித்தாண்டா இருப்பாரு.//

அப்படிப் போடு அருவாளை,

டேங்சுண்ணே, நீங்க தான் கரீக்டா புரிஞ்சிருக்கீங்க.

எம்.எம்.அப்துல்லா said...

//இத்த இன்னாண்ணு சொல்றது? இதத்தான் நாங்க கொலவெறிக்கவுஜன்னு சொல்றோம்..

//



இது கொலவெறிக்கவுஜ ஸ்கொயர்

:))

Raju said...

நான் இப்ப எங்க இருக்கேன்..
யார் நீங்கள்ளாம்...?!?!?

VIKNESHWARAN ADAKKALAM said...

//"இத்த இன்னாண்ணு சொல்றது"//

ஆராய்ச்சிக்குட்படுத்த வேண்டிய செய்தி...

தராசு said...

//@டக்ளஸ்....... said...
நான் இப்ப எங்க இருக்கேன்..
யார் நீங்கள்ளாம்...?!?!?//

தம்பி டக்ளஸூ,

வந்ததுக்கு டேங்சு. இப்படியா ஆடிப் போறது.

தராசு said...

//@ VIKNESHWARAN said...
//"இத்த இன்னாண்ணு சொல்றது"//

ஆராய்ச்சிக்குட்படுத்த வேண்டிய செய்தி...//

வந்ததுக்கு டேங்சு

பரிசல்காரன் said...

பின்றீங்க தலைவா...

எனக்குப் பிடிச்சது 2வது.. (என் வீட்டுக் கண்ணாடியில்...)

தேவன் மாயம் said...

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது

உன் விழிச்சாட்டை அடிகள்

என் மீது வீசப்படாவிட்டால் - என்

மனக் குதிரை மண்டியிட்டுக் கொள்கிறது.////

ஆஹா!!! அருமையான கவிதை!!

தராசு said...

@ பரிசல்காரன் said...

வாங்க தல, வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

@ thevanmayam said...

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

@ எம்.எம்.அப்துல்லா said...

//இது கொலவெறிக்கவுஜ ஸ்கொயர்//

டேங்சுண்ணே,

Nagendra Bharathi said...

Beautiful .
Whenever you find time, could you please have a look at my poems in http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks