Wednesday, June 23, 2010

ஜுகல் பந்தி 23 – ஜூன்- 2010, மருமகன்களுக்கு மரியாதை


ஜமாய் சஷ்டி :

மாமியார் மருமகள் உறவுக் கதைகள், சண்டைக்கதைகள், சிரிப்புகள் என எல்லாத்தையும் கேட்டிருப்போம். ஆனால் மருமகனை கும்பிட்டு, அவருக்கு விருந்து வைக்கறதுக்குன்னே ஒரு விழா கொண்டாடறதை கேள்விப் பட்டிருக்கீங்களா, ஆமான்னாலும் சரி, இல்லைன்னாலும் சரி, இதைப் படியுங்கள்.

ஒரு பேராசை பிடித்த பெண் இருந்தாளாம். (ஹலோ, இந்த பெண்ணிய வாதிகள் உடனே தாரை தப்பட்டையெல்லாம் எடுத்துட்டு கிளம்பக் கூடாது,கதைல அப்படித்தான் சொல்றாங்க), வீட்டுக்கு கடைசி மருமகளா இருந்த அவள் தன் வீட்டிலுள்ளதையெல்லாம் எடுத்து சாப்பிட்டு விட்டு, தின்பண்டம் காணாமல் போய் விட்டதே என வீட்டார் கேட்டால், பூனை திருடி விட்டது என பொய் சொல்லுவாளாம். அவுங்க வீட்டுக்கு வழக்கமா வந்துட்டு போற பூனைக்கு இது ரொம்ப ரொம்ப அவமானமா போய் விடவே, அது சஷ்டி தேவி கிட்ட போய் கண்ணை கசக்கீட்டு நின்னுச்சாம். சஷ்டி தேவியும் சரி சரி மேட்டர எங்கிட்ட விடு நான் இத ஒரு புது விதமா டீல் பண்றேன்னு சொன்னாங்களாம்.

இந்த மருமகளுக்கு ஏழு பசங்களும் ஒரு பொட்டப் புள்ளயும் பொறந்தாங்களாம். (ஏயப்பா, எத்தனை, ஒண்ணா ரெண்டா). ஒருநாள் அத்தனை குழந்தைகளும் காணாமப் போயிட்டாங்களாம். தன் குழந்தைகளைத் தேடி அலைந்து களைத்துப் போய் கண்ணீரோடு இவள் காட்டுக்குள் திரிந்து கொண்டிருக்கும் பொழுது, சஷ்டி தேவி வந்து “என்னம்மா சங்கதி, ஏன் அழுகறே”ன்னு கேக்க, ஓ ன்னு ஒப்பாரி வெச்சுட்டு “என் குழந்தைகள காணோம்”னு இவ சொன்னாளாம். அப்ப தேவியம்மா என்னா பண்ணாங்கன்னா, “அப்பிடி வா வழிக்கு, நீ திருட்டு வேலை பண்ணீட்டு ஒண்ணுமே தெரியாத பூனைக்கு திருட்டு பட்டம் கட்டுனயே, அப்ப அந்த பூனைக்கு எப்படி வலிச்சிருக்கும்”னு கேக்க, “அய்யோ, தாயே நான் பண்ணதெல்லாம் தப்பு, எம் புள்ளங்கள கண்டு பிடிச்சுக் குடு” ன்னு இவ கதறுனாளாம். அப்பத்தான் சஷ்டி தேவி , “இந்தா உம் புள்ளங்களையெல்லாம் எடுத்துட்டு போ, இவுங்களுக்கு நல்லா சோறு ஆக்கிப் போடு” ன்னு சொன்னாங்களாம். அந்த நாள்தான் இந்த ஜூன் மாசம் 17ம் தேதி ஜமாய் சஷ்டி.

இது வெறும் பெங்காலிங்க மாத்திரம் கொண்டாடும் ஒரு பண்டிகை. (நம்மூருல மருமகன்களை யாரு மதிக்கறா, அத விடுங்க). இந்த நாள்ல மருமகன் மாமனார் வீட்டுக்கு வந்தவுடன், வீட்டு நுழை வாயிலில் இருந்து சடங்குகள் ஆரம்பமாகும். ஆறு பழங்கள் நிறைந்த தட்டுடன் மருமகனுக்கு ஆரத்தி எடுக்கும் மாமியார், ஆரத்தி முடிந்ததும் தட்டில் இருக்கும் தானியம் மற்றும் புல் வகைகளை மருமகனின் தலைக்கு மேலே தூவி அவரை ஆசீர்வதிக்கிறார். பிறகு அவரது கையில் புத்தம் புதிதாய் மஞ்சள் பூசப்பட்ட ஒரு கயிறைக் கட்டி, நீ எங்க வீட்டு மருமகனாக்கும் என சொல்லாமல் சொல்லி அவருக்கு இனிப்பு ஊட்டி விடுவார். இது முடிந்ததும் வீட்டுக்கு உள்ளே அழைத்து வரப்படும் மருமகனுக்கு 15 வகையான பதார்த்தங்கள் கொண்ட ஒரு விருந்து அளிக்கப்படும். பெரும்பாலானவை மீன் கலந்த பண்டங்களாயிருப்பினும், வழக்கமான குழம்பு, அவியல் பொறியலோடு, மீன் பலவகையிலும் சமைக்கப் பட்டிருக்கும். இதையெல்லாம் ஒரு பிடி பிடித்தபின் மருமகனுக்கு இனிப்பு கொடுப்பது மாமியாரின் கடமை. இந்த இனிப்பு வைபவத்தில் ரசகுல்லா கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இப்படியாக ஜமாய் சஷ்டி நிறைவு பெறுகிறது.

(அடச்சே, மொதல்லயே தெரியாமப் போச்சே, தெரிஞ்சிருந்தா பெங்கால்ல போய் பொண்ணு எடுத்திருப்பனே, என்ன பண்றது, உங் குடுமி இங்க நம்மூரு தங்கமணி கைலதாண்டின்னு எம்பெருமான் என்னைக்கோ எழுதி வெச்சிட்டாரு, அதை யாரால மாத்த முடியும்)

நாட்டு நடப்புகள் : எங்க ஊர் பஞ்சாயத்து

ஒரு வெளியூர் விவசாயி ஒரு நாள் எங்கூருக்கு வந்தாரு. எங்கூர்ல எங்க பாத்தாலும் பச்சைப் பசேல்னு வயலு வெளஞ்சு கிடக்குது, குடியானவனெல்லாம் சந்தோஷமா விவசாயம் பண்ணி, அறுவடை பண்ணிகிட்டிருக்கான். வெளியூர் விவசாயி பாத்தான், ஆகா, தங்கச் சொரங்கமடா இது, அள்ள அள்ள தீராதுன்னு கணக்குப் போட்டுட்டு நாட்டாமை கிட்ட போனான். “ஐயா, எனக்கு வடக்கால ஒரு கையகல இடம் குடுங்கைய்யா, நானும் கொஞ்சம் விவசாயம் பண்ணிக்கறேன்”னு சொன்னான். நாட்டாமைக்கு அவன் யாரு, அவன் என்ன பண்ணப் போறான்னு தெரியுமோ தெரியலயோ, சரிப்பா, நீயும் பொழச்சுப் போன்னு சொல்லீட்டாரு. அவனும் விவசாயத்தை ஆரம்பிச்சான்.

அவன் நிலத்துல கண்ட மருந்தையும் போட்டான், கண்ட விதையையும் போட்டான், என்னென்னமோ மிசுனுகள வெச்சு வித்தை காமிச்சான். பக்கத்து நிலத்துக் காரன் அய்யோ, பாழாகுதேன்னு கத்துனான், அப்ப நாட்டாமை சொன்னாரு அட வுடுப்பா, எங்கிருந்தோ பஞ்சம் பொழைக்க வந்தவன் அவன், பொழச்சுப் போகட்டும் விடுன்னாரு.

ஒரு நாள் ராத்திரி, நாட்டாமை வீட்டுல திடீர்னு கதவு தட்டற சத்தம், என்னடான்னா, நம்ம வெளியூர் விவசாயி, அய்யா, தப்பு நடந்து போச்சுங்கைய்யா, நான் வெச்சிருந்த மிசின்ல ஒண்ணு வெடிச்சுப் போச்சுங்கைய்யான்னு அழுதான். சரி பரவால்ல விடுப்பா, நான் பாத்துக்கறேன்னாரு நாட்டாமை.

அய்யா, அந்த மிசுன்ல இருந்து எல்லா பவுடரும் கொட்டி நிலம் கொஞ்சம் சேதாரமாயிருச்சுங்கைய்யா,
அப்படியா, சரி போனா போகுது வுடு, எல்லாம் நம்மாளுகள விட்டு சரி பண்ணிப் போடலாம்.

அய்யா, இன்னொண்ணும் நடந்து போச்சுங்கைய்யா, மெசுனு வெடிச்சதுல ஊர்காரங்க கொஞ்சம் பேரு செத்துப் போய்டாங்கைய்யா, அவுங்கெல்லாம் என்ன அடிக்க வாராங்கைய்யா

அப்பிடியா சேதி, சரி சரி அதா நிக்குது பாரு வண்டி, அதுல ரெண்டு மாட்டைப் பூட்டிட்டு விடியறதுக்குள்ள இந்த ஊரை விட்டுப் போயிரு, ஊர்க்காரங்கள நான் பாத்துக்கறேன்னு சொல்லி நாட்டாமை வண்டி, மாடு இன்னும் வழிச்செலவுக்கு பணமெல்லாம் குடுத்தாரோ என்னமோ தெரியல. அவன் மாயமா மறைஞ்சிட்டான்.

ஊர்க்காரங்க ஒண்ணு சேந்து நாட்டாமைகிட்ட போய் கத்துனாங்க, செத்தவங்க இன்னமும் செத்தாங்க, கத்துனவங்க இன்னும் கத்துனாங்க, அய்யா, நெலமெல்லாம் பாழாப் போச்சேய்யா, புள்ள குட்டியெல்லாம் செத்துப் போச்சேய்யா, இப்ப என்னய்யா பண்ணுவோம்னு கதறுனாங்க.
இப்படி வருசக்கணக்கா கத்தி கத்தி ஒரு புண்ணாகும் ஆகலன்னதும்
நாட்டாமை பஞ்சாயத்தக் கூட்டு, இப்ப எங்களுக்கு வழி சொல்லுன்னு விடலைப் பசங்கெல்லாம் ஒரு தினுசா பேசுனாங்க. நாட்டாமை தீர்ப்புச் சொல்லுன்னு காது படவே கத்த ஆரம்பிச்சிட்டாங்க.

நாட்டாமையும் பாத்தாரு, இவுனுகளோட பெரிய ரோதனையாப் போச்சே, தீர்ப்பு சொல்லலைன்னா ஒரு வேளை நம்ம நாட்டாமை பதவிக்கே ஆப்பு வெச்சுருவானுகளோன்னு நெனச்சுகிட்டு, எல்லாம் ஆலமரத்தடிக்கு வாங்கடான்னாரு…

எல்லாப் பயலுகளும் வாந்தாங்க, நாட்டாமை ஒரு பெரிய தீர்ப்பா சொல்லப் போறாருடான்னு பாத்துகிட்டே இருந்தாங்க, கடைசியா நாட்டாமை சொன்னாரு,

சரிடா, சாகாதவனெல்லாம் செத்தவனுங்களுக்கு பணம் குடுங்கடானு தீர்ப்பு சொல்லீட்டாரு. எல்லாரும் ஆடிப் போயிட்டாங்க, நாட்டாமை நிலத்தைக் கெடுத்து, மெசின வெடிச்சு, உயிரக் குடிச்சது வெளியூர்க்காரன், நாங்க எதுக்கு பணம் குடுக்கணும்னு கேட்டாங்க.

நாட்டாமை சொன்னாரு “ டேய், நான் ஒரு தரம் தீர்ப்பு சொன்னா சொன்னதுதான், சொன்னபடி செய்யுங்க”

நாங்களும் செய்யறோம். எங்க வயித்தக் கட்டி வாயக் கட்டி நாங்க சம்பாரிச்சதையெல்லாம் எங்க ஊர்சனங்களுக்கு குடுத்தற்றோம்.

அதுனால எந்த நாதாரிப் பயலுக்கு அவங்கூர்ல எதை செய்யக் கூடாதுன்னு சட்டம் சொல்லுதோ, ஆனா அதை செஞ்சு பார்க்க ஆசையிருந்தா, அவிங்கெல்லாம் எங்கூருக்கு வாங்க, எங்க நாட்டாமை உங்களுக்கு இடம் குடுப்பாரு. நீங்க உங்க இஷ்டத்துக்கு என்ன வேண்ணா செய்யலாம், எதை வேண்ணா அழிக்கலாம், எதை வேண்ணா உருக்கலாம், கெடுக்கலாம். எத்தனை பேரை வேண்ணாலும் கொல்லலாம், யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. எதாவது தப்புத்தாண்டா ஆச்சுன்னா வண்டியும் மாடும் குடுத்து நாட்டாமை தப்பிக்க வைப்பாரு. அதையும் மீறி எதாவதுண்ணா, எங்க கிட்டயே பணம் வாங்கி, அங்க செத்தவனுக்கெல்லாம் குடுத்துருவாரு.

எப்பூடி எங்க பஞ்சாயத்து???????

நான் வெறும் கதைதான் சொன்னேன், இதையும் போபால் மேட்டரையும் ஒண்ணா நினைச்சுகிட்டீங்கண்ணா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

வீட்டு நடப்புகள் : பல்பு குடுத்தம்ல….

ஒரு ஃபர்னிச்சர் கடையில்.

சார், ஒரு டீபாய் வேணும்.

வாங்க சார், இது கிளாஸ் டாப், இது சன் மைக்கா டாப், இது அதுல டாப்பு, அது இதுல டாப்புன்னு அவுரும் சொல்லிகிட்டே போறாரு. மேலிடம் அமைதிகாக்குது, அப்பவே நமக்குள்ள பட்சி சொல்லுது “டேய், அடக்கி வாசி, அங்க என்னமோ மாஸ்டர் பிளான் உருவாகிட்டிருக்குதுடா, அமைதியா இரு” நம்மளும் அமைதி காக்க, எதிர் முனைல ஒரு சின்ன குழப்பம்.

சில நிமிட அமைதிக்குப் பின் “ சரி எதை எடுக்கலாம்னு சொல்லுங்க”

“நீ பாத்து செலக்ட் பண்ணும்மா”ன்னு நம்ம சொன்னவுடன், என்ன எனக்கு தெரியாதுன்னு நெனச்சிட்டியா இப்ப பாருன்னு ஒரு அலட்சியப் பார்வை என் மீது வீசப்பட்டது, சாரி சாரி பார்க்கப் பட்டது.

மேலிடம் களத்துல இறங்கி சார், இந்த மாடல் காமிங்க, அந்த மாடல் காமிங்கன்னு சொல்லச் சொல்ல சேல்ஸ் மேனுக்கு நாக்குத் தள்ளீருச்சு, ஆஹா, புடவைக் கடைக்கு போறவங்க தெரியாம இங்க வந்துட்டாங்களோன்னு பரிதாபமா பாக்க, நான் இங்க நடக்கறதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னு ஒரு ஓரத்துல நிக்க, கடைசியா இந்த ரெண்டுல எதை எடுக்கலாம்னு சொல்லுங்கன்னு ஒரு குரல் கேட்டுச்சு, ஓ நம்மளத்தான் கூப்புடறாங்களோன்னு நான் போய், “உனக்கு எது பிடிக்குதோ அதை எடுத்துக்கோ” ன்னு சொல்ல, குரல் ஒரு கட்டை மேல போய் “அதெல்லாம் சரி, எது வேணுன்னு சொல்லுங்க” ன்னவுடன் பார்த்தால், ஒரு கிளாஸ் டாப்பு, ஒரு சன்மைக்கா டாப்புன்னு ரெண்டும் முன்னால இருந்துச்சு. ரெண்டும் என்ன ரேட்டாகுது சார்னு விலையை கேட்டுட்டு, அப்புறம் ஒரு சின்ன தில்லாலங்கடி கணக்கு போட்டுட்டு, சன் மைக்கா டாப் சரியாயிருக்கும்னு சொல்ல சரி அதைவே பேக் பண்ணி வீட்டுக்கு அனுப்புங்கன்னு சொல்லீட்டாங்க. அப்பவே எனக்கு இது சரியா படல, இவ்வளவு சீக்கிரமா மேட்டர் செட்டிலாகுதுன்னா என்னமோ இருக்குதுடான்னு நெனச்சுகிட்டு சரி, நம்ம பிளான் வொர்க் அவுட் ஆகும் போலன்னு நெனச்சுகிட்டே காசு குடுத்துட்டு வந்துட்டேன்.

அடுத்த நாள் மத்தியானம் பொண்ணுகிட்டேருந்து போன், “அப்பா டீபாய் வந்திருச்சுப்பா, அந்த கடைக்கார அங்கிள் அதை அசெம்பிள் பண்றாங்க”

“என்ன டீபாய்மா அது?”

“அதாம்பா, அந்த கண்ணாடி போட்டு பளபளான்னு இருக்குமே அதுதான்”

ஆஹா, நெனச்சது நடந்திருச்சுன்னு நெனச்சுகிட்டு வீட்டுக்கு வந்து, வீட்ல டீபாய் வந்ததையே கவனிக்காத மாதிரி பவ்யமா உக்காந்திருந்தா,

“டீபாய் வந்திருச்சே பாக்கலியா”

“பாத்தேன், அருமையா இருக்கு, நான் என்ன வேணும்னு நெனச்சனோ அதே மாதிரி அமைஞ்சிருக்கு”

“இல்லையே நீங்க சன்மைக்கா டாப் தான சொன்னீங்க”

“ஆமா, எனக்கு கிளாஸ் டாப்தான் புடிச்சிருந்திச்சு, ஆனா கடைல இது புடிச்சிருக்குன்னு சொன்னா அது வராதுன்னு தெரியும், அதனால தான் பிடிக்காததை பிடிச்சதுன்னு சொன்னேன். இப்ப பிடிச்சது வந்திருச்சுல்ல.”

எதிர் முனையில் பல முக குறியீடுகள், பெரு மூச்சுகள், மனதுக்குள் பல ஜூலு மொழி வார்த்தைகள், இன்னும் பெயர் தெரியாத சங்கேதங்கள், கண் காது போன்ற உறுப்புகளிலிருந்து புகை வெளியாவது போல ஒரு தோற்றம்.

ஏ ஹைய்யா, ஏ ஹைய்யா, ஏ கும்தலக்கடி கும்மா, ஏ ஐத்தலக்கடி அம்மா

எப்பூடி, நாங்களும் பல்பு குடுப்பம்ல.

ங்கொய்யால பக்கங்கள்

கருப்பு கலர்ல சட்டை போட்டா
ஓ அந்த தாடிக்காரரு குரூப்பாங்கறாய்ங்க

சிவப்பு கலர்ல சட்டை போட்டா,
என்ன தம்பி வினவறீங்களாங்கறாய்ங்க

பச்சை கலர்ல போட்டா
அட, அம்மாவுக்கு புடிச்ச கலர்ங்கறாய்ங்க

மஞ்சள் கலர்ல போட்டா
ஓகோ, ஐயாவோட துண்டு கலருங்கறாய்ங்க

கெடக்குது கெரகம்னு வெள்ளை கலர்ல போட்டா
ஓ, அந்த சென்ட்ரல் பார்ட்டியாங்கறாய்ங்க

இப்பிடி எல்லா கலருக்கும் எதாவது சொன்னா
ங்கொய்யால
எந்த கலர்லதான் சட்டை போடறது



14 comments:

Paleo God said...

ஜூப்பரு! :)

பஞ்சாயத்து.. ஹும்ம்ம் :(

Romeoboy said...

என்ன ஒரு வில்லத்தனம் அண்ணாத்த..

பரிசல்காரன் said...

பல்பு குடுத்தீங்களா வாங்கினீங்களா ப்ரதர்ர்ர்ர்ர்?

தராசு said...

வாங்க ஷங்கர்

டேங்சு.

தராசு said...

வாங்க ரோமியோ,

இதுல என்னா வில்லத்தனம்????

தராசு said...

வாங்க பரிசல்,

டேங்சு. யோவ் நம்புங்கைய்யா, பல்பு குடுத்தன்யா, சே, யாருமே நம்ப மாட்டேங்கறாங்க

விக்னேஷ்வரி said...

ஏதாச்சும் ஒரு லைனை எடுத்துப் போட்டு நல்லாருக்குன்னு சொல்லலாம்ன்னு பார்த்தா, வரிக்கு வரி நல்லா எழுதிருக்கீங்க. பதிவு முழுக்க ஒரு புன்னகையோடவே வாசிச்சு முடிச்சேன். சூப்பரு.

பரிசலுக்குப் பொறாமைங்க. அவரால வீட்ல பல்பு வாங்க மட்டும் தான் முடியுது போல ;)

DHANS said...

நாங்களும் பல்பு குடுப்பம்ல athukapuram nadanthathu thani pathiva??

தராசு said...

வாங்க விக்கி,

டேங்சு.

தராசு said...

வாங்க தன்ஸ்,

ஹலோ நாங்கெல்லாம் வீட்ல டெரர். தெரியுமில்ல.

Raju said...

டீபாய் மேட்டார் கலக்கல் தல!

இப்போல்லாம், மேலிடத்த எதிர்த்து நிறைய புரட்சி பண்றீங்களோ?

அப்ரேன்டீஸ் said...

annaatha satta potaathaanae prachana... athanaala thaan namma gandhi thaathaa tholainoekku paarvaiyoda appavae sonnaaru satta podatheengada peraandingalannu...

Anonymous said...

// தராசு said...
வாங்க தன்ஸ்,

ஹலோ நாங்கெல்லாம் வீட்ல டெரர். தெரியுமில்ல.

//


எல்லாருக்கும் நம்ப லட்சணம் நல்லாவே தெரியும்ணே :))

Anonymous said...

மேலே உள்ள அனானி கமெண்ட் நாந்தான் போட்டேன். பெயர் விடுபட்டு விட்டது சாரி

எம்.எம்.அப்துல்லா