Monday, April 13, 2009

நானும் அதத்தான் சொன்னேன்.

முதல்ல பாலாஜி தான் ஆரம்பித்தான். " மச்சி, நேத்து சேகர் இந்த நம்பர் குடுத்தாண்டா, நம்பகமான பார்ட்டியாம், செம கட்டயாம். ஒரு பிரச்சனையுமில்லைண்ணு சொன்னாண்டா".

குடித்துக் கொண்டிருந்த பியர் கிளாசை கீழே வைத்துவிட்டு பிரசன்னா கேட்டான் " அவன் போயிட்டு வந்தானான்னு விசாரிச்சயா?"

"ஆமாண்டா, அவன் அப்படித்தான் சொன்னான்".

ஒரு இனம்புரியா சங்கடத்துடன் பீட்டர் " டேய், இதெல்லாம் நமக்கு வேண்டாண்டா, கடைசியில கழுத்தறுத்துறுவாளுகடா, எனக்கென்னமோ இது சரின்னு படல"

"டேய், இவன் எப்பவுமே இப்படித்தாண்டா, எதுக்குடுத்தாலும் நெகட்டிவ்வாவே பேசிட்டிருப்பான். நாம என்னடா உடனே சரின்னு சொல்லிரப் போறமா, போனைப் போட்டுப் பாப்பமே, என்னதான் சொல்றான்னு" என்று சொல்லியபடியே பாலாஜி செல்போன் எடுத்து நம்பர் அழுத்தப் போனான்.

அவன் கையைப்பிடித்து தடுத்த பிரசன்னா " அறிவிருக்காடா உனக்கு, இந்த மேட்டரையெல்லாம் செல்லுலயா பேசுவாங்க, ஒரு ரூபா போன் எதுக்குடா இருக்கு?"

அதுவும் சரிதான் என்பதுபோல் மூவரும், பியரை உறிஞ்ச ஆரம்பித்தார்கள். முடிந்ததும், பில் செட்டில் பண்ணிவிட்டு, வெளியே வந்து அவனவன் பைக்கை எடுக்கப் போனபோது, சல்யூட் அடித்த செக்யூரிட்டிக்கு ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து விட்டு, " இங்க ஒரு ருபா போன் எங்க இருக்கு?" என்றான் பிரசன்னா. கையில செல்போன் வெச்சுகிட்டு ஒரு ரூபா போனா என விநோதமாக பார்த்த செக்யூரிட்டியும் வாங்கிய ஐந்து ரூபாய்க்கு விசுவாசமாக, "அதோ அந்த பொட்டிக்கடையில இருக்கு சார்" என்றார்.

"மச்சி, பைக் இங்கயே இருக்கட்டும், பேசிட்டு வந்துடலாம்" என்றவுடன் பாலாஜியும், பிரசன்னாவும் முன்னால் நடக்க வேண்டா வெறுப்பாய் பின்னால் பீட்டர் நடந்தான். அதைப் பார்த்து சூடான பாலாஜி
" டேய், மச்சி, உனக்கு இதுல விருப்பமில்லைனா நீ முதல்லயே கழண்டுக்க, சும்மா மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு வெறுப்பேத்தாத"

"டேய், ஏண்டா மச்சான் டென்ஷன் ஆகற, அவன் அப்படித்தான் விடு, இப்ப அவகிட்ட என்ன, எப்படி பேசப் போறேன்னு மட்டும் யோசி"

"என்னது, நாஆஆன் பேசப் போறேனாஆஆஅ"

"ஆமாம், நீ தாண்டா, இதெல்லாம் நல்லா செய்வே"

" ஆமாண்டா, இதுல எனக்கு பத்து வருஷ எக்ஸ்பீரியன்ஸூ இருக்கற மாதிரியல்ல சொல்ற"

" சரிடா, மச்சி பேசுடா"

அதற்குள் பெட்டிக்கடை வந்துவிடவே, "சார், ஒரு ரூபா காயின் இருக்குதா?,

பெட்டிக்கடைக்காரரும் "எத்தனை வேணும் சார்?"

"ஒரு அஞ்சு குடுங்க" என ஐந்து ரூபாயை நீட்டி, சில்லரை வாங்கி செல்போனில் நம்பர் பார்த்து டயல் செய்தவனை பெட்டிக்கடைக்காரரும் வினோதமாகத் தான் பார்த்தார்.

"ஹலோ",

"ஹலோ, சொல்லுங்க" குரலைக் கேட்டதும் பாலாஜிக்கு உடலில் ஒரு இனம் புரியா கிளர்ச்சியும் நடுக்கமும்.

"என் பிரண்டுதான் இந்த நம்பரைக் குடுத்தான். அ...அது...... அது வந்துங்க"

"சரி, எப்ப வர்றீங்க?" இதை சற்றும் எதிர்பாராததால் நிலை குலைந்து போய், ரிசீவரின் வாயைப் பொத்திக் கொண்டு " டேய், எப்ப வர்றீங்கன்னு கேக்கறாடா" என கிசுகிசுத்தான். அவனும் இதை எதிர்பார்க்காததால், ஒரு அரை விநாடி யோசித்து விட்டு, "நாளைக்குன்னு சொல்லு",

"அ, ஹ, ஹ, ஹலோ, நாளைக்கு வ்ர்றோம்"

"வர்றோம்னா, எவ்வளவு பேரு"

"மூணு பேரு" என்றவுடன், பீட்டர் சைகையில் நான் இல்லை என்க, அவனை பார்வையாலேயே அடக்கிய பிரசன்னா, "இரு, அவன் பேசட்டும்".

அங்கு மறு முனையிலிருந்து "மூணு பேரா, ஓ.கே, எத்தனை மணிக்கு"

"ஈவ்னிங் ஏழு மணிக்கு வர்றோம்"

"ஓ.கே, அப்ப அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணீரட்டா"

"ஓ.கே. ஓ.கே"

" நாளைக்கு ஈவ்னிங் ஒரு அஞ்சு மணிக்கு கால் பண்ணுங்க"

"எதுக்குங்க?"

"மத்த விஷயத்தையெல்லாம் நாளைக்கு நீங்க கால் பண்ணும்போது சொல்றேன் டார்லிங்"

"ஓ,கே"

"ஓ,கே, பைய்ய்ய், சீ, யு டுமாரோ டார்லிங்"

போனை வைத்ததுமே எதோ ஒரு சாதனை நிகழ்த்தியது போல ஒரு மதப்பில்"சார், ஒரு கிங்ஸ் குடுங்க" என்று வாங்கி பற்ற வைத்தவனை, மற்ற இருவரும் ஆவலுடன் பார்த்தனர். புகையை உள்ளுக்கிழுத்தவாறே, பெட்டிக்கடையை விட்டு சற்று தள்ளி வந்து, " மச்சி, நான் சொன்னனில்லையாடா, இவ மத்தவுளுக மாதிரி இல்லடா, என்ன போல்டா பேசறா தெரியுமா, எடுத்த எடுப்புலயே எப்ப வர்றேன்னு கேக்கறாள்னா அவ எவ்வளவு ஓப்பன் மைண்ட்டடா இருக்காள்னு பாத்துக்கோயேன்"

"ம், சரி, இப்ப என்ன பண்றது?"

"என்ன பண்றதா, ஒரு கையால பூமியை சீக்கிரமா சுத்திவுட்டு நாளைக்கு அஞ்சு மணி ஆக்கிடு"

"கடிக்காதடா, என்ன ரேட்டு, எங்க வரணும்னு கேட்டுருக்கலாம்ல"

"ஆமாடா, இப்ப சொல்லு இதெல்லாம், அங்க ரிசீவரோட வாய பொத்திகினு கேட்டப்ப எல்லாம் பொத்திகினு இருந்தீங்க, சரி, சரி, விடு, அதான் நாளைக்கு கூப்படச் சொல்லீருக்காள்ல, அப்ப பேசிக்குவோம்"

"டேய், இவன் ஏண்டா, மந்திரிச்சு வுட்டவன மாதிரி மூஞ்சிய வெச்சுருக்கறான், பீட்டர் மச்சான், மறுபடியும் சொல்றேன், வேணான்னா நின்னுக்கோடா"

"அதில்ல, மச்சான், இதெல்லாம் தப்பில்லையா, கல்யாணத்துக்கு முன்னால இதெல்லாம்........"

"ஐயா, பாதிரியாரே, பைபிளை எடுத்துட்டு அப்படி ஓரமா போயிருங்களேன், எங்க வழியில ஏன் வர்றிங்க"

"டேய், விடுங்கடா, நாளைக்கு என்ன பண்ணப்போறோம்கறத யோசிங்கடா"

"நாளைக்கா, மச்சி நாளைக்குத்தான்...!!!! வேணாண்டா எனக்கு ஒரே வெக்கமா இருக்குது"

ஹெல்மெட்டை மாட்டிவிட்டு " பை டா" என்று ஹெல்மெட்டின் கண்ணாடிக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, கண்ணாடியை தூக்கிவிட்டு "மச்சான் பீட்டரு, கடவுள் கிட்ட இதெல்லாம் ஒளிவு மறைவில்லாம நாளைக்கு சொல்லீட்டு வா, ஏன்னா அடுத்த நாள் போய் மன்னிப்பு கேட்கணும் பாரு" ன்னவனை முறைத்தபடியே பீட்டர் வண்டியை கிளப்பினான்.

நாளைக்கு,,,,.....,,,,

காலையிலிருந்தே மூவருக்கும் ஒரு இனம் புரியா பரபரப்பு, மூணு மணிக்கே பிரசன்னா சொன்னான், " மச்சி, இப்பவே பேசலாண்டா"

"அடங்குடா, அதான் அவ அஞ்சு மணிக்குனு சொன்னாள்ல"

அந்த அஞ்சு மணிக்கு, இன்னொரு பெட்டிக்கடையிலிருந்து,

"ஹலோ"

தேனொழுகும் குரலில்"ஹலோ, சொல்லுங்க"

படபடப்புடன், மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு பாலாஜி "நாந்தாங்க, நேத்து பேசுனனே, நீங்க அஞ்சு மணிக்கு பேசச் சொன்னீங்க"

"ஓ, அந்த மூணு பேரு குரூப்பா?"

"ஆமா"

"உங்களுக்கு ஒரு பிரண்டு நம்பர் குடுத்தார்னு சொன்னீங்களே, அவர் எல்லா டீடைலும் சொன்னாரா?"

"இல்லீங்களே, போன் பண்ணி பேச சொன்னாரு, மத்த விஷயத்தையெல்லாம் உங்க கிட்ட பேசிக்க சொன்னாரு"

"அவர் பேர் என்ன சொன்னீங்க?"

"சேகர்"

""சரி, இப்ப எங்க இருக்கீங்க?"

"நான் இப்ப நுங்கம்பாக்கத்திலிருந்து பேசுறேன், இன்கம் டேக்ஸ் ஆபீசுக்கு பக்கத்துல இருக்கேன்"

"சரி, நான் சொல்றத கவனமா கேட்டுக்குங்க, நான் செலக்டட் கஸ்டமருக்குத்தான் சர்வீஸ் பண்றேன். நீங்க என்ன ஐ.டி.யா?

"இல்லீங்க, வேற ஒரு எம்.என்.சி" (மனதுக்குள் இதெல்லாம் அவசியமா)

"சரி, நான் சொல்ற இடத்துல பணத்தோட வந்து நில்லுங்க."

"................................................."

"என்ன சத்தத்தையே காணோம், ஏமாத்திருவனோன்னு பயமா, அப்படி நம்பிக்கை இல்லாம இருந்தா வேண்டாம்"

"அப்படி இல்லீங்க, அது ..... வந்து... எத்தனைன்னு சொல்லவே இல்லியே"

"பத்தாயிரம்"

"பத்தா, டூ மச்"

"நான் வந்து பேரம் பேசற ரோட் சைட் பார்ட்டி இல்லை, தேவையில்லன்னா போன கட் பண்ணுங்க"

"அதில்லைங்க, வந்து..... அது, ....ஒரு செகண்ட் ஹோல்ட் பண்ணுங்க"

ரிசீவரின் வாயை பொத்திக்கொண்டு, "மச்சி, பத்து கேக்கறாடா" பீட்டரின் வாய் பிளந்த படியே நின்று போக, பிரசன்னா ஒரு முடிவோடு சொன்னான், "சரி எங்க கொண்டு வர்றதுன்னு கேளு"

"சரி நாங்க வந்து பணத்தை குடுக்கறோம்"

"ஹா, ஹா, ஹா, பணத்தை நான் வாங்கறது இல்லை, எங்க மேனேஜர் வருவாரு அவுரு கிட்ட குடுங்க"

"அதில்லை, பணத்தை நாங்க உங்க இடத்துக்கு கொண்டு வந்து குடுத்தற்ரோம்"

"நம்பிக்கையில்லையா, அப்ப சரி, வெச்சுடறேன்.

" அதில்லைங்க, எப்படி இருந்தாலும் உங்க கிட்டதான வரப்போறோம், அங்கயே குடுத்தரலாம்னுட்டுத்தான்"

"சிஸ்டம் அப்படி இல்லைங்க, மேனேஜர் தான் பணத்தை வாங்குவாரு"

"சரிங்க"

"பணத்தோட நுங்கம்பாக்கம் பார்க் ஹோட்டலுக்கு பின்னால இருக்கற பார்சன் காம்ப்ளெக்ஸ்க்கு வந்துட்டு கால் பண்ணுங்க, பைய்ய்ய்"

அடுத்த பத்து நிமிடத்தில்,

"ஹலோ, பணத்தோட வந்துட்டங்க"

"சரி, காம்ப்ளெக்சுக்கு பின்னால பவித்ரானு ஒரு ஹோட்டல் இருக்கும். அங்க வெயிட் பண்ணுங்க ஒரு ஃபாஸ்ட் டிராக் கால் டேக்சி வரும், அந்த டிரைவர் கிட்ட பணத்த குடுத்துருங்க, பணம் அவர் கைக்கு போனதும் நான் கூப்பிடறேன்"

"ஹலோ, அவுரு தான் உங்க ஆளுன்னு நாங்க எப்படி நம்புறது?"

"பரவாயில்லையே, ரொம்ப உஷாரா இருக்கீங்க, கண்ணா, இந்த தொழில்ல நம்பிக்கை தான் முக்கியம். இருந்தாலும் உனக்கு ஒரு க்ளு குடுக்கறேன், அந்த டிரைவர் கிட்ட "டால்ஃபினுக்கு மீசை முளைச்சுருச்சான்னு கேளுங்க, அவரு கடல் தண்ணி இன்னும் வத்தலைன்னு" சொல்வாரு,அவுரு பதில் சொன்னா மாத்திரம் குடுங்க சரியா"

"சரி, அவர வரச் சொல்லுங்க "

பீட்டர் கலவரத்துடன் " மச்சி போதுண்டா, இதோட நிறுத்திக்கலாண்டா" என்றதும், அவனை கையெடுத்துக்கும்பிட்டு " பாதர், நீங்க சர்ச்சுக்கு போங்க பாதர்" என்று சொல்லிவிட்டு ஒரு கிங்ஸ் வாங்கி பாலாஜி பற்ற வைத்தான், மூவருக்கும் மனதுக்குள் ஒரு கிளுகிளுப்பாக இருந்தாலும் பயமாகவும் இருந்தது. யாரும் யாருடனும் பேசவில்லை, சிகரெட் முடிந்ததும் பாலாஜி அதை கீழே போட்டு மிதிக்கும் பொழுது அந்த பாஸ்ட் டிராக் எட்டிப் பார்த்...., பாலாஜி கேள்வி கேட்...... டிரைவர் பதில் சொல்......., பணம் கை மாற.............கார் கடந்து சென்றது.

"டேய், என்னடா, இன்னும் போனையே காணோம்", பீட்டர் கேட்க, அவனை கொலைவெறியோடு பார்த்த பாலாஜியின் செல் துடித்தது.

"ஹலோ"

"ஹலோ, என்ன கண்ணா, ரொம்ப நேரமா வெயிட் பண்ண வெச்சுட்டனா, சாரிமா, இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் இந்த தொழில்ல அவசியம்ப்பா, சரி, நான் சொல்றத கவனமா கேளு, எனக்கு கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ்தான் பிடிக்கும், ஒரு பாக்கெட் எனக்குனு வாங்கிட்டு வந்துரு"

"எங்க வரணும்?"

"கே.கே. நகர் தெரியுமில்ல, அங்க பாண்டிச்சேரி ஹவுஸ்னு ஒரு பில்டிங் இருக்கும் அதுக்கு எக்ஸாட்டா பின்னால ராஜேஷ்வரி அபார்ட்மெண்டுனு ஒரு அபார்ட்மெண்ட் இருக்கும், அதுல ஹவுஸ் நம்பர் 27, அதுல தான் இந்த ராணி அந்த ராஜாவுக்காக வெயிட் ப்ண்றேன், சீக்கிரம் வாங்கடா என் ராஜாக்களா"

"அங்க வாட்ச்மேன் தொந்தரவு எதாவது?????"

"ஒண்ணும் கவலைப்படாத, அங்க யாரும் இருக்க மாட்டாங்க, நீங்க தாராளமா வரலாம், இது டீசண்டான இடம் கண்ணா, யாரும் இருக்க மாட்டாங்க"

"சரி இன்னும் ஹாஃபனவர்ல அங்க இருப்போம்"

"சீ யூ, உம்ம்ம்ம்மாஆஆஆ"

அந்த உம்மாவில் அதிர்ச்சியடைந்தாலும், ஆவல் மிகுதியில் "மச்சி ரெண்டு பாக்கெட் கிங்ஸ் வாங்கிக்கோடா" என்று சொல்லி விட்டு, பைக்கை நோக்கி நடந்தான் பாலாஜி.

கே.கே. நகர், பாண்டிச்சேரி ஹவுஸ், ராஜலட்சுமி அபார்ட்மெண்ட், வாட்ச்மேன்.

"சார், யாருங்க"

"27 - ம் நம்பர் வீட்டுக்கு போகணும்"

வாட்ச்மேன் ஒரு புன்னகையுடன் மூவரையும் ஏற் இறங்க பார்த்துவிட்டு, "நம்மளை எதாவது கவனியுங்க சார்"

ஒரு தாளை கைமாற்றி விட்டு, பதட்டத்துடனும் அவசரத்துடனும் 27ம் வீட்டை அடைந்தால், வீடு பூட்டி இருக்கிறதா, திறந்திருக்கிறதான்னே தெரியாமல் அப்படி கதவிலேயே பதித்த ஒரு பூட்டு,
பாலாஜி கதவை லேசாக இரண்டு முறை தட்டினான், மனதுக்குள் மத்தாப்பு.முகத்தில் ஒரு புன்னகை. மற்ற இருவரும் யாராவது தங்களை கவனிக்கிறார்களா என்று பார்த்தார்கள்.

இரண்டாவது முறை சற்று பலமாக தட்டினான், முகத்தில் கலவரம், இன்னும் பலமாக தட்டி, அப்புறம் பலபலபலமாக தட்டி, முகத்தில் கொலைவெறியோடு, ஃபோனை எடுத்து "ஹலோ, என்ன விளையாடறீங்களா, 27 ம் நம்பர் வீட்டுல யாரும் இல்லையே"

" கூல் டவுன் கண்ணா, நானும் அதத்தான சொன்னேன் 27ம் நம்பர் வீட்டுக்கு வாங்க அங்க யாரும் இருக்க மாட்டாங்கன்னு, அங்க யாரும் இல்லையா, பெஸ்ட் ஆப் லக் நெக்ஸ்ட் டைம்"

"ஹலோ, ஹலோ, ஹலோ"

இப்பொழுது பீட்டரின் கண்ணில் கொலைவெறி.

10 comments:

கார்க்கிபவா said...

ஹய்யோ ஹய்யோ..

அப்புறம்?

தராசு said...

@கார்க்கி said...
//ஹய்யோ ஹய்யோ..

அப்புறம்?//

எதுக்கு, எதுக்கு இந்த கொலை வெறி????

அத்திரி said...

எதிர்பார்த்த முடிவு தான் அண்ணே

VIKNESHWARAN ADAKKALAM said...

ரொம்ப இழுத்துட்டிங்க...

Suresh said...

ha ha :-)

தராசு said...

//@அத்திரி said...
எதிர்பார்த்த முடிவு தான் அண்ணே//

அப்படியா, எதோ ஒரு கதை எழுதலாம்னா உடமாட்டேய்ங்கறாய்ங்க

தராசு said...

//@VIKNESHWARAN said...
ரொம்ப இழுத்துட்டிங்க...//

ஒரு சில நலம் விரும்பிகள்கிட்ட குடுத்து இதை சின்னது பண்ணுங்கப்பான்னு சொன்னேன், இதெ நல்லாருக்குன்னு சொன்னாங்களே, அத நம்பீட்டேன்.

தராசு said...

//@ Suresh said...
ha ha :-)//

டேங்சு

Thamira said...

விறுவிறு சுறுசுறுன்னு போயி கடைசில சப்.!

தராசு said...

//@ ஆதிமூலகிருஷ்ணன் said...
விறுவிறு சுறுசுறுன்னு போயி கடைசில சப்.!//

வந்ததுக்கு டேங்சு,

அடுத்த தரம் சரி பண்ணிக்கறேன்.