Friday, February 19, 2010

வாங்க பாஸ், எதாவது செய்யலாம்

தமிழ்

இது மனிதனின் குரல்வளையிலிருந்து புறப்பட்டு, நாவால் நயப்பட்டு, உதடு கிழித்து வெளிக்கிளம்பும் ஓசையின் மறு உருவம் மட்டும் தானா,

ஒலிகளின் ஏற்றத்தாழ்வுகளால் உருவெடுத்து, ஒருவரிலிருந்து பலருக்குள் ஊடுருவும் காற்றின் மறு வடிவமா,

ஓசையெனும் உருவிலிருந்து எழுத்து என்னும் வடிவத்திற்கு வளர்ச்சியடைந்த பரிமாண விந்தையா,

எழுத்தெனும் மலர்கள் ஒரு சேரக் கட்டப்பட்டு வார்த்தைக் கதம்பமாகி வண்ணக் காட்சி தரும் வித்தக சரமா,

ஏ யப்பா, எப்புடியெல்லாம் பில்டப் குடுக்க வேண்டியிருக்கு, நான் சொல்ல வந்தது இதுதான். போன வருஷம் செப்டெம்பர் மாதம் நம்ம இணைய தளபதி (நல்லா பார்த்துக்குங்க, இ ணை ய தளபதின்னு சரியா எழுதியிருக்கேன்) கார்க்கி உலகத்தமிழ் மாநாட்டில் பதிவர்களாகிய நாம் என்ன செய்யலாம்னு ஒரு பதிவு போட்டாரு, (http://www.karkibava.com/2009/09/blog-post_28.html). இதற்கு நாமெல்லாருமே ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தோம்.

இப்பொழுது மாநாடு மே மாதம் நடக்க விருக்கும் நிலையில், திட்டங்கள் இப்பொழுதிருந்தே தீட்டுவது நலமாயிருக்கும் என நினைக்கிறேன்.

வாங்க பாஸ், எதாவது செய்யலாம்.

9 comments:

கார்க்கிபவா said...

அண்னே,,ஞாபகமிருக்கு...

ஆனா இதுல ஏதோ பிரச்சினை இருக்கிற மாதிரி சொன்னாங்க.அதனால்தான் அடுத்த கட்டத்த பத்தி பேசல..

நடப்பதே டவுட்டுன்னு சொன்னாங்க.. அப்புறம் முறையா நடக்காதுன்னு சொல்றாங்க.. பார்ப்போம்..

பிரபாகர் said...

அண்ணே,

சரியாத்தான் ஞாபகப்படுத்தியிருக்கீரு...

சகாவும் நமக்கு முந்தி கமெண்ட்டிட்டாரு...

பிரபாகர்.

Raju said...

செய்யலாமே..!

தராசு said...

வாங்க கார்க்கி, டேங்சு

தராசு said...

வாங்க பிரபாகர்,

நன்றி

தராசு said...

யப்பா ராசா.....,

எங்கப்பா போயிருந்தே

ரிஷி said...

எதாவது செய்யணும் பாஸ் !!

Anonymous said...

எதாவது பத்தி சரியாத்தான் பிரச்சினை நடக்காதுன்னு சொன்னாங்க.. அண்ணே,நமக்கு எதாவது செய்யலாமே..!
ஞாபகமிருக்கா...இருக்கிற மாதிரி சொன்னாங்க அதனால்தான் டேங்சு சொல்றாங்க..

Thamira said...

யாராவது முன்னின்றா நல்லாயிருக்கும்.? எல்லோரும் அமைதியா இருக்குறதப்பார்த்தா.. ஹூம்.