Tuesday, December 15, 2009

முகவரி மாறும் முகங்கள்

சமீபத்தில் பதிவர் வெங்கிராஜாவின் பதிவான முகங்கள் படிக்க முடிந்தது. சென்னையின் இரவு நேர காட்சிகளை அழகான புகைப் படங்களுடன் பதிவு செய்திருந்தார். புகைப்படங்களில் வயதான முதியவர்கள், தாடி வைத்தவர்கள், காய் விற்கும் அம்மா, பூக்கட்டும் மூதாட்டி, காவித்துண்டை கழுத்தில் சுற்றிய ஒரு அய்யப்ப பக்தரோ அல்லது முருக பக்தரோ தெரியவில்லை, வெற்றுடம்புடன் குனிந்து நிற்கும் ஒரு வாலிபனும் முதியவரும் என காமிரா கவிதை பாடியிருக்கிறது. ஒரு விஷயம் மாத்திரம் புரியவில்லை, சென்னை என்றில்லை இந்தியாவின் எந்த நகரத்தையும் அதன் பரிமாணங்களை வெளிக்கொணர காமிரா பிடிப்பவர்களின் கண்களுக்கெல்லாம், வளர்ந்து நிற்கும் கட்டிடங்களோ, வழுக்கிச் செல்லும் சாலைகளோ, சாலைகளின் நடுவில் சுற்றிச் சுழலும் பாலங்களோ, மல்லிகைப் பூச்சூடி கொடியிடை கொண்ட எங்கள் மண்ணின் குமரிகளோ, மடிக்கணியை எதோ ஒரு விளையாட்டுப் பொருள் போல கழுத்தில் தொங்கவிட்டு அலுவலகம் விரைந்து வித்தை காட்டும் அறிவு ஜீவி இளைஞர்களோ, பரந்து விரிந்து நிற்கும் கடற்கரைகளோ (ஏ யப்பா மூச்சு முட்டுதய்யா) கண்ணிலேயே படுவதில்லை.

காமிராவில் தெரிவதெல்லாம் பிச்சைக்காரர்கள், வறுமையில் வாடுபவர்கள், முகத்தில் ஈ மொய்க்க அழுக்கு கரங்களில் ஒரு சோற்றுப் பருக்கையை வாய்க்குள் திணித்து, ஒழுகும் சளி மூக்குடன் உள்ள குழந்தைகள், திறந்து கிடக்கும் சாக்கடைகள், போஸ்டர் ஒட்டிய வெளிச்சுவர்கள், உடைந்த பின்னும் ஓடிக் கொண்டிருக்கும் அபாயநிலை வாகனங்கள், பெருநகரங்களில் உடல் விற்க காத்திருக்கும் விபச்சாரிகள், வயிறு பெருத்த காவல் துறையினர், மஞ்சள் கோட்டை தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் என எதிர்மறைக் காட்சிகளாகவே ஏன் தெரிகிறதென்று தெரியவில்லை.

வெங்கி ராஜா என்ன நினைத்து இந்தப் படங்களை பிடித்தார் என தெரியவில்லை. ஆனால் இரவில் சென்னையில் படம் பிடிக்க எத்தனையோ சிறப்பான விஷயங்கள் இருக்கும்பொழுது வெறும் வயது முதிர்ந்த தாடிக்காரர்களும், தள்ளாத வயதிலும் பூக்கட்டும் பூக்காரம்மாவும் தானா கண்ணில் பட்டார்கள். அவர் சுற்றிய வழியான ராமாவரம் பாலத்திலிருந்து தோமையர் மலை போகும் வழியில் எதிர்படும் கத்திப் பாராவின் பாலம் இரவில் ஒரு தனி அழகுதான். ராடிசன் ஹோட்டல் வரை செல்லும் ஜி.எஸ்.டி சாலை இரவில் வண்ணமயமான விளக்குகளால் ஒளியூட்டப் பட்டு துடைத்து விட்டாற்போல் பளிச்சென்றிருக்கும். மனிதர்களைத்தான் படம் பிடிக்க வேண்டும் என நினைத்தால், எத்தனையோ மனிதர்கள் இந்த நாட்டின் செழிப்பை வெளிப்படுத்த கடிகார முட்களின் ஒவ்வொரு நகர்விற்கும் எங்கள் சாலைகளின் எல்லா மூலைகளிலும் தென்படுவார்கள். அவர்களை எல்லாம் விடுத்து ஏழ்மையை மாத்திரம் படம் பிடித்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என தெரியவில்லை.

எனது பல ஆண்டுகால வெளிநாட்டு வாசத்தில், அங்கு அமர்ந்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காணும் பொழுதெல்லாம், இந்தியாவைப் பற்றிய ஏதாவது ஒரு நிகழ்ச்சியென்றால், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிந்ததெல்லாம் விநாயகர் சிலைகளும், குப்பை நிறைந்த குறுக்குச் சந்துகளும், மும்பை, டெல்லி மற்றும் கல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதியின் மித மிஞ்சிய உதட்டுச் சாய மங்கைகளும், திறந்த சாக்கடைகளும், நாய்களுடன் கூட்டுச் சேர்ந்து எச்சிலையில் சாப்பிடும் பிச்சைக் காரர்களும், வாகன நெரிசலில் ஒலிப்பான் பிளிர சிக்கித் தவிக்கும் மாநகர சாலைகளும் என அலங்கோலங்கள் மாத்திரமே காண்பிக்கப் படும். இது இந்தியாவின் வளர்ச்சியைப் கண்டு வயிறெரியும் மேற்கத்திய மக்களின் வக்கிரப் பிரச்சாரம் என்றே நான் சொல்லுவேன்.

ஆனால் நாம், நம்மைப் பற்றி கூறும் பொழுது ஏன் இப்படி வறுமையையும், அவலங்களையும் மாத்திரம் கூற வேண்டும்? யதார்த்தத்தை காண்பிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஏன் நாம் நம்மை தாழ்த்திக் கொள்கிறோமோ தெரியவில்லை. நான் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில் அங்கிருக்கும் இந்தியர்களால் தயாரிக்கப் பட்ட Broken Promises என்ற ஒரு இந்திய திரைப் படத்தை காண முடிந்தது. குமாரன் நாயுடு என்ற இந்தியரால் இயக்கப் பட்டு முற்றிலும் இந்திய நடிகர்களே நடித்த படம். அதிலும் கூட தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் பழக்க வழக்கங்களை எள்ளி நகையாடியிருப்பார் இந்த நாயுடு. இந்தியப் பெண்கள் ரோட்டின் நடுவில் நின்று பூரிக் கட்டையை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதில் வரும் கதாநாயகர்களான இந்திய இளைஞர்கள் வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்றுபவர்களாகவும், சரக்கடிக்க மற்றவர்களை ஏமாற்றி காசு பார்ப்பவர்களாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் தென் ஆப்பிரிக்கா வாழ் மக்களிலேயே மூன்று வேளை சாப்பாடு சாப்பிட்டு, குடும்ப அமைப்பு சிதையாமல் வாழும் இனம் இந்திய இனம் தான். ஆனால், அவர்களை ஒரு இந்தியன் இப்படி இழிவாக சித்தரிப்பதையும், அதைப் பார்த்து இந்தியர்களே எள்ளி நகையாடுவதும் வேதனையாக உள்ளது. வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இந்த பழக்கத்தை அதிகமாக நான் கண்டிருக்கிறேன். சக இந்தியனின் இந்திய பழக்க வழக்கங்களுக்காக வெள்ளையர்களுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்யும் இந்தியர்களை வெகுவாக கண்டிருக்கிறேன்.


இந்தியாவின் யதார்த்தங்கள் இன்னும் ஏழ்மைக் கோலத்தில் தானா இருக்கிறது? கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய நிதியமைச்சரிலிருந்து மற்ற அமைச்சர்கள் வரை, பாராளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரின் ஆரம்பத்திலேயே சொன்னார்களே, இந்தியா 7.2 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறதென்று, இந்த நல்ல செய்திகள் நம்மவர்களின் மனங்களிலும் சரி, ஊடகங்களின் பார்வையிலும் சரி ஏன் ஒரு உப்புப் பெறாத விஷயமாகவே போய் விடுகிறதோ தெரியவில்லை. நண்பர்களே, நம்புங்கள். நாம் வளர்கிறோம். சிகரங்களை தொடுகிறோம். சராசரி இந்தியனின் வருமானம் உயர்ந்து கொண்டிருக்கிறது. உலகத் தரம் என்பது இந்தியாவிலும் பல துறைகளில் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. வெளி நாட்டவர்கள் இந்தியாவை நோக்கி சம்பளத்துக்காக வர ஆரம்பித்து விட்டார்கள். இந்தியர்களின் ஆளுமை உலகின் பல துறைகளிலும் கோலோச்சுகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சுருக்கம் விழுந்த முகங்களையும், கடுக்கன் தொங்கும் காதுகளையும், கோவணமணிந்த உடல்களையும் எதார்த்தம் என்ற பெயரில் காண்பித்துக் கொண்டிருப்பீர்கள்?

28 comments:

பிரபாகர் said...

உங்களின் கருத்துக்கள் முழுதும் ஏற்புடையதாயிருக்கிறது அண்ணே!

பிரபாகர்.

நாஞ்சில் நாதம் said...

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக

நாஞ்சில் நாதம் said...

"எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக"

"முகவரி மாறும் முகங்கள்"

அப்படியும் சொல்றீக இப்படியும் சொல்றீக. மாத்தி மாத்தி சொன்னா எப்படி

கார்க்கிபவா said...

:))

Cable சங்கர் said...

:))))

Venkatesh Kumaravel said...

நேற்று, சென்னை எலியட்ஸ் கடற்கரையில் படம் பிடிக்கச்சென்றேன். மக்களின் நண்பன் காவல்துறை நண்பர்கள் வந்து காமிராவை பிடுங்கிக்கொண்டு சென்றுவிட்டார்கள். மாலைக்கு மேலோ, கடற்கரையிலோ படம் பிடிக்க காவல் நிலையத்தில் அனுமதி வாங்க வேண்டுமாம். நகரத்தில் படம் பிடிக்க தடை (!) செய்யப்படிருக்கிறதாம். இன்ஸ்பெக்டரிடம் பேசி வாங்கிக்கொள்ளச்சொன்னார். வழக்கு போடுவதாகவும், மாணவர்கள் என்பதால் ஒருவேளை மன்னிக்கப்படலாம் என்று சொன்னார். சென்னையின் அழகான விளக்குகளையும் பிரம்மாண்டத்தையும் காட்ட முனைந்த ஒரு கலைஞனுக்கு கிடைத்தது இதுதான். :P

Venkatesh Kumaravel said...

மிக்க நன்றி சார், கவனித்தமைக்கும், ஒரு உரையாடலை துவக்கியமைக்கும். மதிக்கிறேன்.
*இதில் சரி, தவறு என்றெல்லாம் இருக்கிறதா, நான் இப்படி வறுமையை எடுத்ததை நியாயப்படுத்தவேண்டுமா என்றே தெரியவில்லை.
*நீங்கள் சொன்ன கத்திப்பாரா பாலத்தை அவுட் ஆஃப் ஃபோக்கஸில் எடுத்து முதல் படம் போட்டிருக்கிறேன். இதை Bokeh என்பார்கள்.
*ராடிசன் சாலையையும் எடுத்தேன். போடுவதா என்று தெரியவில்லை. உங்கள் பார்வைக்கு: பதிவில் இணைக்க விரும்பினால் இணைத்துக்கொள்ளுங்கள்-
http://i48.tinypic.com/4si1yd.jpg

*சிறுவயதில், அந்தப் பகுதியில் படித்ததாலும், அங்கு வளர்ந்ததாலும் அந்தப் பகுதியின் சில இடங்கள் மாறாமல் இருப்பது என்னை நினைவுப்பாதைக்குள் இழுத்துச் சென்றன. பொதுவாகவே தனிமை என்னை பாதிக்கும் ஒன்று. இந்த முகங்களிலிருந்த உணர்ச்சிகள் என்னைப் படமெடுக்க உந்தின என்று சொல்லலாம். வேறொன்றுமில்லை.
*சுருக்கம் தாங்கிய முகங்களையும், சோகம் வடியும் கண்களையும் பார்க்க எங்களுக்கு மட்டும் இனிக்குமா என்ன? எனது முந்தைய கத்துக்குட்டி படங்களைப் பார்த்தீர்களானால், இயற்கையின் வண்ணங்கள் தெறிப்பதும் ஒருவிதமான தண்மையான உணர்வை பார்வையாளருக்கு தருவதே என் நோக்கமாய் இருந்திருக்கும் (என்று நம்பி எடுத்தவை.) :D

Venkatesh Kumaravel said...
This comment has been removed by the author.
Venkatesh Kumaravel said...

http://paathasaari.blogspot.com/search/label/புகைப்படம்

http://flickr.com/photos/venkiraja

எனது மொத்த புகைப்படங்களின் தொகுப்பு. விமர்சனத்துக்கு மீண்டும் நன்றி. குழப்புவது தான் பின் நவீனத்துவம், அழவைப்பதும் புரியாமலிருப்பதும் தான் உலகத் திரைப்படம், இறுக்கமாய் இருப்பதுதான் நல்ல புகைப்படம் போன்ற மாயைகள் விலகப் பிரார்த்திப்போம்! கலையின் எல்லைகள் மிக விசாலமானவை.

அத்திரி said...

// இந்தியா 7.2 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறதென்று,//

அப்படியா அண்ணே....அப்போ விலைவாசி உயர்வு 100 சதவீதம்...சரியா அண்ணே

Prabhu said...

வசூல் ராஜாவில் சொல்லுவானே, I want poor india photograph....

தராசு said...

வாங்க பிரபாகர்.

டேங்சு

தராசு said...

நாஞ்சில் அய்யா,

நம்ம நம்மைப் பற்றி மத்தவங்களுக்கு சொல்லும்போது நம்ம கிட்ட இருக்கற நிறைகளை சொல்லலாமே.

ஆனா அப்பப்ப வேதனையில இந்த மாதிரி புலம்பறதும் உண்டு.

தராசு said...

கார்க்கி,

டேங்சு

தராசு said...

கேபிள் அண்ணே

டேங்சு

தராசு said...

வெங்கி ராஜா,

முதலில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். உங்களை காயப் படுத்துவதோ, உங்கள் பதிவை குற்றம் சாட்டுவதோ என் நோக்கமல்ல. அதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் எனபது உங்கள் பின்னூட்டங்களில் தெரிகிறது.

உங்களது ரசனையை மிகவும் மதிக்கிறேன். எலியட்ஸ் கடற்கரையில் நடந்த விஷயம் வேதனைக்குள்ளானது. எனது வருத்தங்கள். கடைசியில் உங்கள் கேமரா கிடைத்ததா இல்லையா?

உங்களைப் போலவே தனிமையை அதிகம் விரும்பி ரசிப்பவன் நான். ஆனால் என்னை இவ்விதம் எழுதத் தூண்டியது என்னவென்றால், நம்மை நாம் பிரதிபலிக்கும்பொழுது இன்னும் மேலான முறையில் ஒரு முன்னேற்றமடைந்தவர்களாய் பிரதிபலிக்கலாமே என்ற ஆதங்கம்தானே தவிர யதார்த்தங்களை மூடி மறைக்கவோ அல்லது அவை குறித்த எதிர்மறை எண்ணங்களோ அல்ல.

உங்கள் பதிவில் யதார்த்தங்களின் பிரதிபலிப்பில் நமது செழுமையும் ஏழ்மையும் சரியான அளவில் சமன்படுத்தப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லுவேன்.

மேலும் வெளி நாடுகளில் நமது மண்ணின் மைந்தர்களாலேயே நானும் என் சக தோழர்களும் அவமானப் படுத்தப் பட்ட பொழுது ஏற்பட்ட காயத்தின் வலி எனக்குள் இன்றும் உண்டு. இந்தப் பதிவின் நோக்கமே அந்த வேதனையை வெளிப்படுத்துவதுதானே தவிர, உங்களை குற்றம் சாட்டுவது அல்ல.

புரிந்து கொண்டமைக்கு நன்றி.

தராசு said...

அத்திரி அண்ணே,

விலைவாசி உயர்வின் காரணங்கள் வேறு. தேவைக்குத் தகுந்த உற்பத்தி இல்லாத போது விலைவாசி உயர்வது தவிர்க்க முடியாதது. இத்தைகைய ஏற்றத்தாழ்வுகள் எல்லா நாட்டின் பொருளாதாரத்திலும் உண்டு.

இவை சமன் செய்யப்பட்டதாக சரித்திரமே இல்லை.

தராசு said...

பப்பு,

ஆமாம், இதுதான் இந்தியர்களைப் பற்றிய வெளிநாட்டவரின் கண்ணோட்டமாக இருக்கிறது.

Venkatesh Kumaravel said...

இன்னமும் ’பாம்பாட்டிகளின் நாடு’ ரக குற்றச்சாட்டுகள் நம்மை விட்டு அகலவில்லை என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது. பிட் குழுமத்தினரின் ‘என் நகரம்’ போட்டியில் இவ்வெண்ணம் தகர்க்கப்படும் என்பது என் எண்ணம். பார்க்கலாம்! :)

க‌ரிச‌ல்கார‌ன் said...

//குழப்புவது தான் பின் நவீனத்துவம், அழவைப்பதும் புரியாமலிருப்பதும் தான் உலகத் திரைப்படம், இறுக்கமாய் இருப்பதுதான் நல்ல புகைப்படம் போன்ற மாயைகள் விலகப் பிரார்த்திப்போம்//
பிரார்த்திப்போம் கூட்டாக‌

தராசு said...

"என் நகரத்துக்கு" வாழ்த்துக்கள் வெங்கி.

தராசு said...

வாங்க கரிசல்.

டேங்சு

எம்.எம்.அப்துல்லா said...

தராசுண்ணே,

உங்கள் ஆதங்கத்தோடு 100% ஒத்துப்போகிறேன். மற்றவர்கள் நம்மை உயர்வாக மதிக்க முதலில் நம்மேல் நமக்கு உயர்ந்த எண்ணங்கள் வேண்டும்.

உங்கள் பதிவை சரியாக உணர்ந்த வெங்கியின் புரிதல் ஆச்சர்யமூட்டுகின்றது.

:)

ஹுஸைனம்மா said...

நாணயத்துக்கு இருபக்கம் போல எல்லா நாட்டுக்கும் இப்படி இருட்டுப் பக்கங்களும் இருக்கத்தான் செய்கிறது. இருட்டுப் பக்கங்களை வெளிக்கொணர்வதில் புகைப்படக் கலைஞர்களின் பங்கு மிக முக்கியம். கலைஞர்களின் பார்வையில் இரண்டுமே அழகுதான்.

யூ.ஏ.இ.யைப் பொறுத்த வரை இந்தியா என்றால் பாலிவுட், மலிவான சுற்றுலா, யோகா, தரமான மருத்துவ சிகிச்சை!!

தராசு said...

அப்துல்லா அண்ணே....

டேங்சு.

தராசு said...

ஹுஸைனம்மா,

இருளும் வெளிச்சமும் சேர்ந்ததுதான் ஒரு முழு நாள். இருளை நேசிக்காதவன் வெளிச்சத்தை ரசிக்க முடியாது. ஆனால், பிரதிபலிப்பு என்னும் போது இருளை பிரதிபலிக்க தெரிந்த நமக்கு, வெளிச்சத்தையும் சொல்லத் தெரிய வேண்டும்.

ஹுஸைனம்மா said...

//வெளிச்சத்தையும் சொல்லத் தெரிய வேண்டும்.//

நிச்சயமா, இதில் மறுப்பேதும் இல்லை.

நான் சொல்ல வந்தது, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சில வர்க்கத்தினர் படும் கஷ்டங்களை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தியதில் புகைப்படங்களின் பங்கு அதிகம்.

:-)

ஸ்மைலி போட்டுட்டேன், இனி சண்டைக்கு வரக்கூடாது.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணா நலமா?