Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

Wednesday, November 17, 2010

யோவ், ஆதி.... என்ன ஆச்சு உனக்கு...???

யோவ், நல்லத்தானய்யா எழுதிகிட்டிருந்தீரு, துறை சார்ந்த பதிவு, தங்கமணி பதிவு, அப்புறம் விமர்சனம், அப்புறம் அது, அப்புறம் இதுன்னு எல்லாம் ஒழுக்கமாத்தானய்யா போயிகிட்டிருந்தது, இப்ப என்ன ஆச்சுன்னு இப்பிடி ஒரு வம்பு பண்ண வந்திருக்கீங்க? இப்பத்தானய்யா போட்டியெல்லாம் வெச்சு, அதுக்கு நீ பட்ட கஷ்டத்தையெல்லாம் பார்த்து மலைக்க வெச்சீகளே, என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன், இல்ல ஏன்னு கேக்குறேன்.

How do you feel if, I stop blogging?

திடு திப்புன்னு ஏன்யா புத்தி இப்பிடி வேலை செய்யுது? வேணாய்யா எதாவது சொல்லீரப்போறேன். வழக்கமா, ஒழுக்கமா கடையை தொறந்தமா, பதிவை போட்டமான்னு போயிகிட்டேயிரு, அதை வுட்டுட்டு சும்மா இப்பிடி கோக்கு மாக்கா எதாவது யோசனை பண்ணுனே, அப்புறம் தாம்பரம் முழுக்க உனக்கு பேனர் கட்டிருவோம், அண்ணி கிட்ட சொல்லி கொள்ளிக்கட்டைல சூடு வெக்க சொல்லீருவோம், ஆமா....., சர்வே எடுக்கறாராம் சர்வே, வாயில நல்லா வர்றதுக்குள்ள ஒழுக்கமா அந்த சர்வேவை தூக்குற நீ.... # கடுப்பு.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அது என்னன்னே தெரியல, எங்க ஆபீஸ்ல எல்லார் கடையையும் படிக்க முடியுது, ஆனா தல நர்சிம் கடை, லக்கி லுக்கு கடை, வித்யாக்கா கடை எல்லாம் தொறந்தா அதை மாத்திரம் இந்த பொட்டி தட்டற கும்பல் தொறக்க வுட மாட்றாங்கோ, கடுப்பேத்தறாங்க மை லார்ட்.... # ஏமாற்றம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவர் சந்திப்பு நடந்து பல நூற்றாண்டு ஆன மாதிரி இருக்கு, இப்ப கொஞ்ச நாளா ஊர்பக்கம் தலை காட்ட முடியுதே, சந்திப்பு எதாவது வைப்பாங்களான்னு நானும் பார்க்கிறேன், மூத்த பதிவர்கள் எல்லாம் ஒரே பிஸியா இருக்காங்க போல இருக்குது. கேபிள் அண்ணன்கிட்ட கூட சமீபத்துல கேட்டேன், பார்க்கலாம்னு சொன்னாரு. இந்த வருஷ கடைசிக்குள்ள ஒரு பதிவர் சந்திப்பு வைங்கப்பு....... # ஏக்கம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவுலகுல எல்லாம் பரபரப்பான விஷயங்களை மாத்திரம்தான் பேசறாய்ங்க, அதாவது வில்லங்கமான மேட்டர்னா அதை வெச்சு ஒரு நூறு பதிவாவது வருது, காமன்வெல்த், ஆதர்ஷ் அபார்ட்மெண்ட், ஒபாமா விஜயம், ராசா என்பார் மந்திரி என்பார்னு எல்லாமே ஒரு பரபரப்பான விஷயங்களைத்தான் எழுதறாய்ங்களே ஒழிய, காமன்வெல்த் போட்டில மெடல்களை அள்ளிக் குவிச்ச இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டிகள்ல மண்ணைக் கவ்வுதே அது ஏன்னு ஒரு வார்த்தை கேக்கறாங்களா???? இல்ல, நம்ம வீரர்கள் எல்லாம் நம்ம பேட்டைக்குள்ள மட்டும்தான் வீரர்களா??? இதைப் பத்தி யாருமே எழுத மாட்டேங்கறாய்ங்களே???? # கொளுத்தி போடல்

Friday, February 19, 2010

வாங்க பாஸ், எதாவது செய்யலாம்

தமிழ்

இது மனிதனின் குரல்வளையிலிருந்து புறப்பட்டு, நாவால் நயப்பட்டு, உதடு கிழித்து வெளிக்கிளம்பும் ஓசையின் மறு உருவம் மட்டும் தானா,

ஒலிகளின் ஏற்றத்தாழ்வுகளால் உருவெடுத்து, ஒருவரிலிருந்து பலருக்குள் ஊடுருவும் காற்றின் மறு வடிவமா,

ஓசையெனும் உருவிலிருந்து எழுத்து என்னும் வடிவத்திற்கு வளர்ச்சியடைந்த பரிமாண விந்தையா,

எழுத்தெனும் மலர்கள் ஒரு சேரக் கட்டப்பட்டு வார்த்தைக் கதம்பமாகி வண்ணக் காட்சி தரும் வித்தக சரமா,

ஏ யப்பா, எப்புடியெல்லாம் பில்டப் குடுக்க வேண்டியிருக்கு, நான் சொல்ல வந்தது இதுதான். போன வருஷம் செப்டெம்பர் மாதம் நம்ம இணைய தளபதி (நல்லா பார்த்துக்குங்க, இ ணை ய தளபதின்னு சரியா எழுதியிருக்கேன்) கார்க்கி உலகத்தமிழ் மாநாட்டில் பதிவர்களாகிய நாம் என்ன செய்யலாம்னு ஒரு பதிவு போட்டாரு, (http://www.karkibava.com/2009/09/blog-post_28.html). இதற்கு நாமெல்லாருமே ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தோம்.

இப்பொழுது மாநாடு மே மாதம் நடக்க விருக்கும் நிலையில், திட்டங்கள் இப்பொழுதிருந்தே தீட்டுவது நலமாயிருக்கும் என நினைக்கிறேன்.

வாங்க பாஸ், எதாவது செய்யலாம்.

Tuesday, February 16, 2010

எங்க அப்பா ஒரு காமெடி பீஸூ

காதலர் தினத்தன்று, மாலைப் பொழுதின் மயக்கத்திலே வண்டியை உருட்டிக் கொண்டு கே.கே. நகரின் அந்த சரித்திர பிரசித்தி பெற்ற அரங்கத்துக்கு சரியான நேரத்துக்கு சென்றேன். வண்டியிலிருந்து இறங்கும் பொழுதே எதிரே தரிசனம் தந்தார் நம் கார்க்கி. பச்சை தேநீர் சட்டை அணிந்து காதலர் தின நினைவுகளோடு தனக்குத்தானே பேசிக் கொண்டு நடந்து கொண்டிருந்தவருக்கு நிர்மலா பெரியசாமியைப் போல் ஒரு வணக்கம் சொன்னேன். திடுக்கிட்டு சுதாரித்தவர், புன்முறுவலோடு வணக்கம் சொன்னார். பரஸ்பர விசாரிப்புகளுடன் விழா அரங்கை அடைந்தோம். அரங்கத்தில் நாங்கள் தான் இரண்டாவதாக வந்தோமோ என நினைத்தால் அட ஆமாம். முதலில் வந்தது கேபிள் மற்றும் பரிசல் மற்றும் உறவும், சுற்றமும், நட்பும்.

நேரம் ஆக ஆக பதிவர்கள் ஒருவர்பின் ஒருவராக வர அரங்கம் நிறைந்ததோடல்லாமல், பதிவர்களின் அன்பினால் ஒவ்வொருவர் மனமும் நிறைந்தது. முக்கிய விருந்தினர்கள் வர தாமதமானதை மிக சாமார்த்தியமாக சமாளிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேகா (கலக்கல் பார்ட்டிப்பா இவுரு) ஒவ்வொருவரின் அறிமுகப் படலத்தை ஆரம்பித்து வைத்தார்.

முதலில் பிரமிட் நடராஜன் வர, பின்னாலேயே மற்ற எல்லா நாட்டாமைகளும் வந்து விட, தொகுப்பாளர் நிகழ்ச்சியின் ஆரம்பத்திற்கு அடையாளமாக தமிழ்தாய் வாழ்த்து பாடவைத்தார். ஏன் எல்லோரும் இப்படி மெதுவாக உதட்டுக்கு நடுவில் பாடுகிறார்களே என்று பார்த்தால், பாதிப் பேர் முதல் சில வரிகளுக்கு மேல் வெறும் உதட்டை மாத்திரம் அசைத்தனர். வாழ்த்துதுமே, வாழ்த்துதுமேவுக்கு பிறகு நிகழ்ச்சி ஆரம்பமானது. முதலில் வரவேற்புரை, பொன்னாடை போர்த்துதல், புத்தக வெளியீடு, நாட்டாமைகளின் வாழ்த்துரைகள், எழுத்தாளர்களின் ஏற்புரைகள், பதிவர்கள் வாழ்த்துரைகள் என நிகழ்ச்சியில் சுவராஸ்யத்திற்கு பஞ்சமில்லாதிருந்தாலும் ஒரு சில விஷயங்கள் மனதை நெருடவே செய்தன.

ஒரு நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக நீங்கள் அழைக்கப் பட்டால், அங்கு ஏதோ அழைத்தார்கள் போனோம் என கடமைக்காக செல்வதை விட்டுவிட்டு, எதற்காக அழைத்தார்களோ அதற்கு முற்றிலும் ஆயத்தமாக செல்வதே, அந்த அழைப்புக்கு நீங்கள் செய்யும் மரியாதையாகும். புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப் பட்டிருக்கிறீர்கள், உங்கள் பொற்கரங்களால் ஒரு படைப்பாளியின் படைப்பு முதல் முதலாக இந்த உலகை காணப் போகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டியது அந்த முக்கிய மனிதரின் தலையாய கடமை. அதை விட்டுவிட்டு எனக்கு நேரமில்லை, அதனால் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று படிக்க முடியவில்லை என சப்பை கட்டு கட்டுவது எந்த நாகரீகத்தில் சேர்த்தி என தெரியவில்லை. ஒருவேளை இவர்கள் கைகளால் வெளியிடும் புத்தகத்தில் இவர்களுக்கு சற்றும் உடன்பாடில்லாத கருத்துக்கள் இருக்குமானால், அதற்கு இவர்கள் பொறுப்பேற்பார்களா??

பிரமிட் நடராஜன் தன் பங்குக்கு கேபிளின் கதைகளை சிலாகித்து பேசிவிட்டார். “கேபிள் சங்கரின் கதைகளை படித்தால், ஒரு 55 வயது மனிதரின் முதிர்ச்சி தெரிகிறது” என்று சொல்லி, அவரை நிரந்தர யூத் ஆக்கி விட்டார். அவர் ஒன்றோ அல்லது இரண்டு கதைகளையாவது படித்திருப்பார் போல் தோன்றுகிறது. ஆனால் அஜயன் பாலா, ம்ஹூம் ……. சாரி பாஸ். நீங்கள் அரங்கத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் அமர்ந்திருந்தீர்கள். இந்த சமயத்திலாவது நீங்கள் வெளியிட்ட பரிசலின் புத்தகத்தை சில பக்கங்கள் புரட்டி படித்திருக்கலாம்.

இங்கு பிழை எங்கு நடந்தது என தெரியவில்லை. பதிப்பகத்தார்தான் புத்தகத்தை விருந்தினரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா, அல்லது படைப்பாளியா என தெரியவில்லை.

கார்க்கியின் வாழ்த்துரை பதிவர்களுக்கு ஒரு உற்சாக டானிக். எப்பொழுது வேண்டுமானாலும் எழுதுங்கள், எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள், ஆனால் எழுதுங்கள் என்றார்.

அனைவரும் கேபிளிடமும், பரிசலிடமும் கையழுத்து பெறுவதில் மிக ஆர்வம் காட்டினோம். கூட்டம் முடிந்து வழக்கம் போல பதிவர்கள் குழுக்குழுவாக கே.கே நகர் முனுசாமி சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அண்ணன் அப்துல்லா, நர்சிம், சுந்தர்ஜி, பைத்தியக்காரன், ஆதி, அடியேன் எல்லோரும் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென ஒரு மாநகர காவல் கார் ஒன்று வந்தது. சில விநாடிகள் அங்கு கும்பலாய் நின்றிருக்கும் அனைவரையும் பார்த்தார் அந்த கடமை தவறா காவலர். பதிவர்கள் பலர் கையில் சிகரெட் வேறு புகைந்து கொண்டிருக்கிறது. சரி, பொது இடத்தில் சிகரெட்டா என தீட்டப் போகிறார் என நினைத்தேன். ஆனால் அந்த கடமை வீரரை யாருமே ஒரு பொருட்டாகவே எண்ணாமல் அவரவர் அரட்டையில் மூழ்கியிருக்க, காவலர் பொறுமை இழந்து விட்டார். “சார், யார் நீங்க, இப்படி கும்பலா எதுக்கு நிக்கறீங்க” என கேட்டவுடன், அப்துல்லா அண்ணன் “அய்யா, நாங்கெல்லாம் இலக்கியவியாதீங்க, இலக்கிய கூட்டம் முடிஞ்சுட்டு நிக்கறோம்” என்று சொன்னவுடன், காவலருக்கு முகம் சுருங்கிப் போய் விட்டது. இங்க எதாவது துட்டு தேத்தலாம்னு பார்த்தா, முதல்லயே இவனுங்க பெரிய வியாதிங்கறானுங்களே, போலாம் ரைட் என சென்று விட்டார்.

விழாவின் ஹைலைட் கேபிள் அண்ணனை அவரது மகன் அறிமுகம் செய்து வைத்ததுதான்.

“எங்கப்பா ஒரு காமெடி பீஸூ”

Monday, November 2, 2009

நான் நிறுத்தீட்டேன், நீங்க........

தினமும் காலையில கணினிக்கு உயிரூட்டி, வந்திருக்கிற மின் அஞ்சல்களுக்கெல்லாம் பதில் சொல்லீட்டு, ஆணி புடுங்க ஆரம்பிச்சு, ஒரு 10 மணி வாக்குல, பதிவுலகத்துல பூந்து, நமக்கு புடிச்ச கடைகளுக்கெல்லாம் போய் புதுசா எதாவது வந்திருக்கான்னு ஒரு தரம் பார்த்துட்டு, அப்படியே பின்னூட்டமும் போட்டுட்டு வந்துருவேன். ஆனா ஒரு சிலர் அப்பத்தான் கடையில புது சரக்கு இறக்கியிருப்பாங்க, பின்னூட்ட பொட்டியில இன்னும் கணக்கே ஆரம்பிச்சிருக்காது. அங்க போயி பதிவ கிண்டல் ப்ண்ணியோ, பாராட்டியோ, அல்லது மேற்கோள் காட்டி கருத்து சொல்லியோ பின்னூட்டம் போட்டுட்டிருந்தேன். அப்படி பின்னூட்டம் போடறதுல ஒரு சிக்கல் இருக்குது. முதல் பின்னூட்டம் டெம்பிளேட் பின்னூட்டமா, “கலக்கல்”, “அசத்திட்டீங்க,” “ரசித்தேன்”, அப்படீன்னு எழுதுனாலோ, அல்லது கிண்டல் பண்ணி எழுதுனாலோ நிறைய விபரீதம் இருக்குது. அதாவது முதல் பின்னூட்டம் எந்த தோரணையில இருக்குதோ அதே மாதிரித்தான் அனைத்து பதிவர்களின் பார்வையும் இருக்கும்னு ஒரு சில பதிவர்கள் நினைக்கறாங்க. ஒரு பதிவு போடறதுக்கு அவனவன் எவ்வளவு கஷ்டப்பட்டு, நொந்து நூலாகி மேட்டர் தேத்தி பதிவு போடறாங்க, அதப் போயி முதல் முதலா கருத்து சொல்றேன்னு சொல்லி எதுக்கு பொழிக்கணும்னு தான் நான் முதல் பின்னூட்டம் போடறத நிறுத்தீட்டேன்.

***************************************************************************
1995ம் வருஷம், ராஜஸ்தானின் பில்வாடா பகுதியில் இருக்கும் சிரோஹி மாவட்டத்தில் வேலை செஞ்சுகிட்டிருந்தேன். எங்க ஆபீஸுக்கு கூட்டி பெருக்கவும், தேநீர் கொடுக்கவும் ஒரு பொண்ணு வேலைக்கு வருவா, ராஜஸ்தானி பழங்குடியினருக்கே உள்ள அந்த சிவப்பு நிறமும், மூக்கும் முழியுமா உள்ள ஒரு பதினஞ்சு வயசு வாலிப பொண்ணு. பக்கத்து கிராமத்துல இருந்து தினமும் வந்த அந்த பொண்ணோட அண்ணன் எங்களுக்கு டிரைவரா இருந்தான். ஒரு நாள் நான் தங்கியிருநத வீட்டுல இருந்து காலையில வேலைக்கு போறதுக்கு சைக்கிள எடுத்துட்டு கிளம்பி கொஞ்சம் தூரம் போனா, வேலைக்கு போக வேண்டிய எல்லாரும் கம்பெனில உள்ள காலனியில ஒரு நாலு ரோடு சந்திக்கற இடத்துல கும்பலா நிக்கறாங்க. என்னனு பார்த்தா, எங்க ஆபீஸ்ல வேலை செய்யற பொண்ணு இடுப்புக்கு மேல ஒரு பொட்டு துணியில்லாம கையை ரெண்டையும் நெஞ்சுக்கு குறுக்க கட்டிகிட்டு, குத்த வெச்சு உக்கார்ந்து, பாவாடையால நெஞ்ச மூட முயற்ச்சி பண்ணிகிட்டிருக்கா, கன்னத்துலயும், முழங்கையிலயும் சிராய்ப்புக் காயம் பட்டு ரத்தம் கசியுது, உதட்டுக்குப் பக்கத்துல ஒரு சின்ன வெட்டுக்காயம். காலையில வேலைக்கு போற அத்தன பேரும் சைக்கிள நிறுத்திகிட்டு அவ வெற்றுடம்பை வேடிக்கை பாக்கறாங்க. ஒருத்தரும் அவளுக்கு உதவ முன்வரல. நான் போய் என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு, பக்கத்து வீட்டு பையனோட சைக்கிள்ல பின்னால உக்காந்துட்டு வேலைக்கு வந்ததாகவும், அவன் சைக்கிள்ல துப்பட்டா மாட்டி, துப்பட்டாவோட சேர்ந்து சோளியும் சக்கரத்துல சுத்தி கிட்டதாகவும், தான் கீழ விழுந்து எல்லாம் காயமாகிவிட்டதாகவும் சொன்னா. (ராஜஸ்தான்ல பில்வாடா பகுதி ஆதி வாசி பெண்கள் இடுப்புக்கு மேல உள்ளாடை எதுவும் அணிய மாட்டார்கள், சோளி அதுவும் உடலின் முன்னே மார்புகளை மாத்திரம் தான் மறைக்குமே தவிர, முதுகு பக்கத்தில் வெறும் இரண்டு கயிறுகளைக் கொண்டு முடிச்சுகள் மாத்திரம் தான் இருக்கும். துப்பட்டா சரிந்து விடாமலிருக்க அதன் ஒரு நுனியை சோளியுடன் சேர்த்து, பின்னூசியால் குத்தியோ அல்லது முடிந்தோ வைத்திருப்பார்கள். சைக்கிள் சக்கரத்தில் சுற்றிய வேகத்தில் துப்பட்டா சோளியையும் கிழித்துக் கொண்டு போய் விட்டது). அத்தனை ஆண்கள் மத்தியில் வெற்றுடம்புடன் நிற்கிறோமே என்ற அவமானம் ஒருபுறம், கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயங்களின் வலி ஒருபுறமுமாக அந்தப் பெண் கூனிக் குறுகிக் கொண்டிருந்தாள். கண்ணுல பொல பொலன்னு கண்ணீரு வழியுது. சுற்றியிருப்பவர்களைப் பார்த்து எனக்கு கோபமே வந்தது, வெற்றுடம்புடன் உக்கார்ந்திருந்த அவளிடம் சென்று, பரபரவென என் சட்டையை கழற்றி அவளுக்கு கொடுத்து விட்டு, அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த அவளின் அண்ணனிடம், ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போ என சொல்லிவிட்டு, பனியனுடன், மறுபடியும் வீட்டுக்கு வந்து வேறு சட்டை அணிந்து வேலைக்கு போனேன். என்னை பனியனில் பார்த்த அனைவரும் என்ன செய்தி என கேட்டனர், விஷயத்தை சொன்னவுடன், கதை வேறு விதமாக திரிக்கப்பட்டு எனக்கும் அவளுக்கும் ஒரு இது என நான் வேலை செய்த இடத்தில் பேசப் பட்டது. அதனால இப்படி அதிரடியா களத்துல இறங்குறத அன்னைல இருந்து நிறுத்தீட்டேன்……..

**************************************************************************
ஒரு நாள் கிழக்கு கடற்கரை சாலையில மனைவி, மகளுடன் கார்ல போகும் போது, அப்பத்தான் தென் ஆப்பிரிக்க வாசம் முடிந்து வந்ததால, அங்க கார் ஓட்டுன பழக்க தோசத்துல, ரோடு நல்லாருக்குதேன்னு நினைச்சுகிட்டே, ஒரு அழுத்து அழுத்த, அந்த தக்ஷின் சித்ராவுக்கு பக்கத்துலன்னு நினைக்குறேன். ஒரு காவல நண்பர், குழாய் மாதிரி என்னத்தையோ ஒண்ணை கையில புடிச்சுகிட்டு என்னையே உத்துப் பாக்கறது தெரிஞ்சுது. அவுருக்கு பக்கத்துல ஒரு அதிகாரி பைக்குல உக்கார்ந்துகிட்டு பேப்பர் படிச்சுகிட்டிருக்காரு, ஒரு ஜீப்பு வேற நிக்குது. ஆஹா, மாட்டிகிட்டமடான்னு வேகத்தை குறைக்கறதுக்குள்ள அவுரு கையைக் காட்ட, வண்டிய சரியா அவுரு கிட்டவே நிறுத்தினேன். கைய காமிச்சவரு சுத்தி வர்றதுக்கும், நான் கண்ணாடிய இறக்கறதுக்கும் சரியா இருந்துச்சு, என்னப் பார்த்தவரு, என்ன ஏதுன்னு கூட கேக்காம, ஒரு வினாடி என்னை ஏற இறஞ்க பார்த்துட்டு, “என்ன சார், டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களே இப்படி பண்ணா எப்படி சார், கொஞ்சம் மெதுவா போங்க சார்” னு சொல்லீட்டு, பதிலுக்கு கூட காத்திராமல் அடுத்த வண்டிய பார்க்க கிளம்பீட்டார். என்ன நடந்ததுன்னே தெரியல, நானும் வண்டிய எடுத்துட்டு கிளம்பிட்டேன். அப்புறமா தான் தெரிஞ்சுது, அன்னைக்கு காலைல தான் தலை முடி வெட்டுனப்ப நல்லா குறைச்சு வெட்டுப்பான்னு சொல்லி நறுக்குன்னு வெட்டியிருந்தேன். நம்ம சிகைஅலங்காரத்தப் பார்த்துதான் அவரு டிப்பார்ட்மெண்ட் ஆளுன்னு நெனச்சுட்டாருங்கறது புரிஞ்சதுக்கப்புறம், டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களாட்டம் முடி வெட்டிக்கறத நிறுத்தீட்டேன்……..

Tuesday, September 1, 2009

பதிவுலக சொர்க்கம்

ஹாய் ஹாய் ஹாய்,

கொஞ்சம் லீவுல போயிருந்தேன். தாய் நாட்டிற்கு வந்து விட்டு திரும்பி வந்துட்டேன். சென்னை வந்தா சந்திப்போம்னு அப்துல்லா அண்ணனும், கேபிள் அண்ணனும் சொல்லியிருந்தாங்க. ஆனா, இங்க இருக்கறது ஆணின்னா, வீட்டுல இருக்கறது கடப்பாரைகளும், அத விட பெரிய கம்பங்களா இருக்குதண்ணே. அதயெல்லாம் புடுங்கி, ஒரு நிம்மதிப் பெரு மூச்சு விடுறதுக்குள்ள லீவு முடிஞ்சு போச்சுண்ணே. தயவு செஞ்சு கோவிச்சுக்காதீங்க. அப்துல்லா அண்ணன் போன் பண்ணாரு. கேரளாவுல ஒரு கல்யாணத்துல இருந்தப்ப கூப்பிட்டிருந்தாரு. சென்னைக்கு வந்து கூப்புடறேன்னு சொன்னேன். ஆனா, முடியலண்ணே. மன்னிச்சுக்கோங்க. எவ்வளவு தான் ஆணியிருந்தாலும், நம்மள இன்னும் உடன் பிறவா சொந்தங்களோட இணைத்து வைத்திருக்கும் பதிவுலகத்தை விட்டு தூரம் போயிட முடியுமா? அப்பப்ப நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து போயிட்டிருந்தேன்.

சிங்கை பதிவர் செந்தில் நாதனுக்காக பதிவர்கள் செய்த உதவி மனதை நெகிழ வைத்தது. இந்த மாதிரி மனித நேயமிக்க ஒரு கூட்டத்தில் தான் நானும் இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது, மிகவும் பெருமையாய் உணர்கிறேன். செந்தில் நாதனுக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டது என்று தெரிகிறது. சீக்கிரம் நலம் பெற வாழ்த்துகிறோம். நர்சிம் தல எடுத்த முயற்சிகளின் மூலம் அவர் தான் யார் என்று இன்னுமொரு முறை நிரூபித்து விட்டார். தலை வணங்குகிறேன் தல.

பதிவுலகம் மந்தமாகவே இருக்கிறது. முரளி கண்ணன் திரும்பி வந்து வழக்கம் போல கலக்கறாரு. கேபிள் அண்ணனோட சினிமா வியாபாரம் பயங்கரமா சூடு பிடிச்சுருக்கு. அண்ணே, நிறைய பேர திரும்பி பார்க்க வைக்கறீங்க. கலக்குங்க. ஆதி மாதிரியே அத்திரியும் ஓட்டுப்பெட்டியெல்லாம் வெச்சாரு, ஒரு பய சீந்த மாட்டேங்கறானேன்னு காண்டுல இருக்காரு போல. அப்புறம் நம்ம ஆதி அண்ணன் இன்னொரு குறும்படம் எடுத்து எல்லாரையும் பாடா படுத்திகிட்டிருக்காரு. நர்சிம் தல சாருவுக்கு எதிர்வினை அனுப்பி ஒரு வெடிய கொளுத்திப் போட்டாரு, எதிர்பார்த்த அளவுக்கு வெடிக்கல போலிருக்கு. கந்தசாமிய பார்த்து நொந்த சாமிகள் ஒரு பாட்டம் அழுது தீர்த்தாங்க.
பதிவுலகில் இருந்து கொஞ்ச காலத்துக்கு வடை பெறுகிறேன்னு சொல்லீட்டு போன அப்துல்லா அண்ணன் திரும்பி வந்திருக்காரு. பரிசல் அண்ணன் வழக்கம் போல கலக்கிகிட்டிருக்காரு. பதிவுலகத்தின் வருங்கால மாப்பிள்ளை கார்க்கி கொஞ்சம் கொஞ்சமா காதல், கனவுன்னு டிராக் மாறிகிட்டிருக்காரு.

எல்லாருடைய எதிர்பார்ப்புகளையும் கோக்கு மாக்கா ஏத்தி விட்டிருக்கிற சிறுகதைப் பட்டறை நிறைய பேரை கனவு காண வெச்சுருக்குது. குருஜிக்கும், பைத்தியகாரன் அண்ணாச்சிக்கும் ரொம்ப ரொம்ப டேங்சு.

ஆக மொத்தம் பதிவுலகம் என்ற சொர்க்கம் அதே சுகங்களுடன், அதே குறும்புகளுடன், அதே நக்கலுடன், அதே மொக்கைகளுடன் இப்படியே எப்பவும் இருக்கணும்னு வேண்டிக்கறேன்.

Thursday, July 16, 2009

அசத்தும் ஆதி மூல கிருஷ்ணன்!!!!!!!!


பதிவர் வட்டத்தில் நகைச்சுவையுடனும், அசத்தும் நயத்துடனும், உருக்கும் உணர்வு பூர்வ பதிவுகளாலும், குறிப்பாக துறை சார்ந்த பதிவுகளாலும் நம் நெஞ்சில் நிறைந்திருப்பவர், தாமிரா என்றறியப்பட்ட, ஆதி என்கிற ஆதிமூல கிருஷ்ணன்.

இவர் சமீபத்தில் தனது வலைப்பூ வடிவத்தை மாற்றி, சில கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது சமீபத்திய பதிவில் ஒரு அன்பர் இட்ட பின்னூட்டம்:

வாழவந்தான் said...
side bar voting-ல் துறை சார்ந்த பதிவுகள் option இல்லை. (இதை குறிப்பிட காரணம் நடந்து முடிந்த univ exam-ல் six sigma and S5 பதிவுகளால் தப்பித்தேன்... நன்றி...)



இந்த பின்னூட்டத்தை படிக்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நாம் எழுதும் பதிவுகள் ரசிக்கப்படுகிறதா என்பதில் அதிக கவனம் செலுத்தும் என்னைப் போன்றவர்கள், அது வாசிப்பவருக்கு பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறதா என அதிகம் யோசிப்பதில்லை. பிரபலமடையவேண்டும் என்ற வேட்கை எனக்குள்ளதே தவிர பிரயோஜனமாயிருக்க வேண்டும் என்ற தாகம் உள்ளதா என்றால், Honestly Speaking இல்லை என்றே சொல்லுவேன்.

மொக்கை பதிவுகள், சர்ச்சைக்குரிய பதிவுகள், வாசகனை வேறு தளத்துக்கு அழைத்துச் செல்ல முயலும் பதிவுகள் என வலையுலகில் பதிக்கப்படும் பதிவுகளை வகைபடுத்த எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும், அடுத்தவருக்கு உபயோகமுள்ள பதிவுகள் என ஒரு சிலவற்றையே சொல்ல முடியும். அந்த வகையில் ஒரு மாணவனின் வாழ்க்கையில் அவரது முக்கியமான கட்டமான பல்கலைக்கழக தேர்வுக்கு உதவும் தரத்திற்கு உங்கள் பதிவுகள் உள்ளது என நினைக்கையில் பெருமையாயிருக்கிறது அன்பரே.

பதிவர்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துள்ளீர்கள், வாழ்த்துக்கள் நண்பனே.

இன்னும் அதிகம் எழுது, இன்னும் அனேகருக்கு உன் எழுத்துக்கள் உதவிக்கரங்களாய் இருக்கட்டும், ஒரு சிறந்த முன் மாதிரியாய் இருக்கட்டும்.

மனம் நிறைய பெருமையுடன்

தராசு

Saturday, July 4, 2009

இந்த போட்டோவில் இருப்பவரை காணவில்லை!!!!!







இந்த போட்டோவில் இருப்பவரை காணவில்லை.



தம்பியின் டைரிக்குறிப்புகள்னு ஒரு பதிவை கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி எழுதியிருக்கிறார்.



காணாம போறதுக்கு முன்னாலவரைக்கும் நல்லாத்தானுங்க இருந்தாரு, எல்லார் கடையிலயும் போய், அண்ணே, அண்ணேன்னு கும்மிகிட்டிருந்தாரு.



இது சின்ன வயசுல எடுத்த படமாம், அவுருதான் சொன்னாரு, இப்ப இந்த பச்ச மண்ணு எங்க இருக்குதோ, என்ன நிலமையில இருக்குதோ.



நல்லா கவிதையெல்லாம் எழுதுமுங்க இந்த தம்பி. யாருக்கும் எதாவது ஒண்ணுன்னா முதல் ஆளா வந்து முன்னால நிக்கும்.



சீக்கிரம் வாங்கப்பு, நீங்க இல்லாம ஒரே போரடிக்குது.